ஆன்மீகமும் தலைமத்துவமும் !

தலைமைத்துவம் என்பது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். தலைமைத்துவ பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி சிறந்த தலைவர்களை வழிப்படுத்துவதன் மூலம் நாளைய சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும். அதன்படி விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாதாந்தம் எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியினைத் தொடர் கட்டங்களாக நடாத்தி வருகின்றது.

வாழும் கலை நம்பிக்கை நிதியத்தின் சேவையாளராகிய சட்டத்தரணி. சத்ரி தயாமா ஜி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதோடு மிகவும் சிறப்பான முறையில் தலைமைத்துவப் பயிற்சியை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட ஏனைய சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறந்த தலைவர் உடல், உள, சமூகம் மட்டுமல்லாது ஆன்மீக ரீதியிலும் சிறந்தவராக விளக்க வேண்டும் என்பதை தியானம், சுவாசப் பயிற்சி உள்ளிட்ட பல செயற்பாடுகளூடாக எடுத்தியம்பியமை சிறப்பானதாகும்.

கலாநிதி.சத்ரி தயாமா ஜி அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *