“கேடில் விழுச் செல்வம் கல்வி”

கல்விக்கு வறுமை தடையில்லை என்பதற்கிணங்க இன்றைய தினம் மட் / திக்கோடை கணேச வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தரம் 1 தொடக்கம் 11 வரையான 61 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் கலந்து கொண்டமை சிறப்பானதாகும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்காக எமக்கு கரம் கொடுத்த எமது புலம்பெயர் உறவுகளாகிய கனடாவில் வசிக்கும் திரு.தினேஸ் குமாரவேலு மற்றும் திரு. பகீரதன் கோபாலு ஆகியோர்க்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *