நன்கொடையாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வழங்கிவருகின்றோம்.

அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையில் திருமதி.தாரணி ராம்ராஜ் அவர்களின் பிறந்த தினம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினரால் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன் இணைந்து இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதோடு
மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிகழ்வுகளை இந்த சிறார்களுடன் கொண்டாடும் போது அவர்கள் அன்றைய தினம் மகிழ்வடைவதுடன் அவர்களிற்கான தொடர்ச்சியான போசாக்கு உணவினையும தாங்கள் வழங்கி வைக்கின்றீர்கள்.

அந்த வகையில், கனடாவில் உள்ள எமது அறக்கட்டளையின் உறவான திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் ஊடாக இந்த உதவியினை வழங்கிய திரு.திருமதி.தாரணி ராம்ராஜ் குடும்பத்தினருக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *