நலன்புரி பாலர் பாடசாலையில் வாணி விழா

வாணி விழா என்பது கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியிடம் சிறப்பான கல்வியை வேண்டி கொண்டாடப்படுகின்றது.

இந் நிகழ்வு பாலர் பாடசாலைகளிலிருந்து கொண்டாடப்படுவது அவசியமாகும். அந்த வகையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வாணி விழா நிகழ்வானது இன்றைய தினம் திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டது.

இதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து மாதாந்தம் உதவி வழங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் திருமதி மனோகரி நல்லதம்பி குடும்பத்தினர் இப் பரிசில் பொருட்களுக்கான அனுசரணை வழங்கினர். இவ்வுதவிகளை வழங்கிய எம் அறக்கட்டளையின் அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *