இவர்களின் புன்னகையில் இறைவனைக் காண..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுத்து வரப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் எமது அறக்கட்டளை உறவுகளான செல்வராஜா மேரி கிறிஷாந்த் ஆகியோரின் பிள்ளைகளான மதீசான் மற்றும் கத்தலியா ஆகியோரின் பிறந்த தினமானது எமது புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுடன் இணைந்து விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தினை அடுத்து எமது அறக்கட்டளை உறவான செல்வராஜா குடும்பத்தினரின் உதவியால் மாணவர்களுக்கான சத்துணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது .

இவ்வாறான செயற்பாடுகளை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக முன்னெடுத்து வரும் எமது அறக்கட்டளை உறவுகளுக்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இன்றைய தினம் பிறந்த தினத்தை கொண்டாடும் மதீஷன் மற்றும் கத்தலியா அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாகவும் புகலிடத்தின் விசேட தேவையுடைய மாணவர்கள் சார்பாகவும் பிறந்த தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *