எமது மாணவர்களுக்கும் எம்மால் இயன்ற உதவி

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகள் மத்தியில் நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை முன்னெடுத்து வரும் அதே வேளை எமது தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களுடன் இன்றைய கிறிஸ்துமஸ் தினத்தினைக் கொண்டாடினோம்.

கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் கல்வி பயிலும் எமது மாணவர்கள் மற்றும் எமது சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலினூடாக எம்முடன் இணைந்து செயலாற்றும் எமது பாலர் பாடசாலை ஆசிரியர்களும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றதோடு அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்காக எமக்கு கரம் கொடுத்த அறக்கட்டளை உறவுகளான அமெரிக்காவில் வசிக்கும் கரன் சரவணா, லலித் சரவணா, சரவணா எஸ் ரங்கசுவாமி குடும்பத்தினருக்கு எமது சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளையும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *