இல்லத்தினருடன் இறை தூதனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

உலக மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வண்ணம் இயேசு கிறிஸ்து பிறந்த நாளினை தான் நாம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடி வருகின்றோம். கிறிஸ்துமஸ் பண்டிகையானது உலகெங்கிலுமுள்ள சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவராலும் பரிசுகள் பரிமாற்றப்பட்டு உல்லாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள எமது ஜீவானந்தா மகளிர் இல்லத்தினருடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினோம்.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர்களுக்கான இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள் என்பன வழங்கப்பட்டதோடு இல்லத்தில் வசிக்கும் மாணவிகள் மற்றும் வயோதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமக்கான பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக நிதி வழங்கிய அமெரிக்காவில் வசிக்கும் எமது அறக்கட்டளை உறவுகளான கரன் சரவணா, லலித் சரவணா, சரவணா எஸ்.ரங்கசுவாமி குடும்பத்தினருக்கு இந்த சிறுமிகள், வயோதிபர்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கிறிஸ்துமஸ் தின மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *