இறைவனைக் கண்டோம் இவர்களின் கண்களில்..

இயேசு பாலகனின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தார் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சிறுவர்களின் மனங்களைக் குளிர்விப்பதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களினூடாக நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் மயிலம்பாவளி பிரதேசத்தில் அமைந்துள்ள எமது வாழும்கலை நம்பிக்கை கிராம சிறுமிகள் இல்லத்துடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடும் முகமாக அவர்களுக்கான மதிய உணவு , இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள் என்பன வழங்கப்பட்டதோடு அங்கு வசிக்கும் மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது தனித்துவமான திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து பயணிக்கும் நமது அறக்கட்டளை உறவுகளான அமெரிக்காவில் வசிக்கும் கரன் சரவணா , லலித் சரவணா, சரவணா எஸ் ரங்கசுவாமி குடும்பத்தினருக்கும் இதனை ஒருங்கிணைப்பு செய்துதந்த உறவான லோகிசன் வேலுமாணிக்கம் அவர்களுக்கும் இவ் இல்ல சிறுமிகள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கிறிஸ்துமஸ் தின மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *