அமைப்புகள் பலவாறாயினும் நோக்கம் ஒன்றே !

அமைப்புகள் பலவாறு இருப்பினும் தனிமனித வலுவூட்டலினூடான சமூக மாற்றமே எமது நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும்.

அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்குமான காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர்.
திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு இக்காலப்பகுதியில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எமது எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *