இன்றைய சாதனையாளர்கள்

வறுமை கல்விக்கு தடையாகிவிடக் கூடாது என்ற நோக்கிலும் மாணவர்களை கற்றலில் ஊக்கப்படுத்தவும் பாடசாலை அதிபர்களினூடாக வறுமைநிலையிலுள்ள அடையாளம் காணப்பட்ட மாணவர்களை எமது அறக்கட்டளையினூடாக புலம்பெயர் உறவுகள் பொறுப்பெடுத்து மாதாந்தம் அவர்களது கல்விக்கான ஊக்குவிப்புத்தொகையை வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில் இந்த மாணவர்களை பொறுப்பெடுத்தல் செயற்பாட்டின் மூலம் எமது உதவித்திட்டத்தில் பொறுப்பெடுக்கப்பட்டு கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகளைப் பெற்ற எமது மாணவர்களை நாம் பாராட்டுகின்றோம்.

அதன்படி 32 மாணவர்கள் கடந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்களில் 3 மாணவர்கள் 3 A சித்தியினைப் பெற்று எமக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

எமது மாணவர்களைப் பொறுப்பெடுத்த எமது அறக்கட்டளை உறவுகளும் சித்திபெற்ற மாணவர்களும் வருமாறு :

● திரு.இ.ஏகாம்பரம் ஐயா, கனடா ஊடாக,

• திரு.திருமதி.நிசாந்தன் சிவாஜினி = க.திரிதரன் 3 A

• திரு.இ.ஏகாம்பரம் அவர்கள்
= அ.துர்ஷிகா 2A B

• திரு.திருமதி.ரேணு திரு
= திலோஜினி 3B
= கௌசல்யா B 2C
= ருக்சிகா A B S
= நர்மலோஜன் 3S
= சிந்துஜா C 2S
= கவிதா 2B C

  • திரு.அனோஜ் அருளானந்தம் = சுஜந்தியா 2B C • திரு.திருமதி.தர்மிகா பிரதீப்
    = நதுர்சினி 2A B
  • திரு.திருமதி.பிரவீனா ஜனார்த்தன்
    = சாருகா 3C
  • செல்வி.ரோஷிகா ராஜேந்திரன்
    = சியானா 2C S
  • திரு.திருமதி.ரமணி காண்டீபன்
    = கேதீசா 3C • திரு.திருமதி.பிருந்தா சுதன்ராஜ்
    = பிருத்திகா 2C S
  • திரு.திருமதி.தீனா தம்பியையா
    = டனுசா C 2S

● திரு.லோகேந்திரா அவர்கள், அமெரிக்கா ஊடாக,

= தாருக்சா 3A
= விதுஸ்கா A 2B
= கோபிதர்சனா A 2B
= தர்சா B C S
= ஜோதிகா A C S
= சகஸ்திவாணன் B 2S
= சதுஜன் B 2C

● செல்வி.துவாரகா ஊடாக,
= சதுஜனி 2B C
= தர்சிகா 3A

● செல்வி.லோசனா ஊடாக,
= சதுர்சிகா B 2C

இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக உதவிக்கரம் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடு சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *