அன்னை ஸ்ரீ சாரதா நிலையம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது.

அவ்வாறே எமது சாரதா நிலையத்தின் மாணவிகள் கராத்தே, யோகா, சிரட்டைக் கைத்தொழில், ஆரிவேர்க் போன்ற பல்வேறு பயிற்சிகளிலும் சிறந்து விளங்கும் அதேவேளை கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியிலும் பங்குபற்றி பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான எமது செயற்பாடுகளுக்காக அனுசரணை வழங்கிய எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவ்வாறே சாரதா நிலையத்தில் பயின்று 2022 இல் உயர்தரம் தோற்றிய 8 மாணவிகளுக்கான உதவியானது கனடாவில் வசிக்கும் திரு.இ.ஏகாம்பரம் அவர்களூடாக வழங்கப்பட்டு வந்த அதேவேளை தற்போது 2023 இல் சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் 6 மாணவிகளுக்கான உதவி தேவைப்படுகின்றது.

ஆகையால் தாங்கள் தன்னலம் கருதாமல் மாதாந்தம் இம் மாணவிகளுக்காக அர்ப்பணிக்கும் சிறு தொகையானது ( 3500 LKR ) அவர்களின் வாழ்வில் நாளை பாரியளவான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.

இன்றே எம்முடன் இணைந்து செயற்படுங்கள்.

மேலதிக தொடர்பிற்கு:
https://wa.me/+94776770780

நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,
மட்டக்களப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *