நாளைய சமுதாயத்திற்காக நாம்

சிறந்த தலைவர்களை உருவாக்குவதன் மூலம் நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாதாந்தம் எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.ஸ்டான்லி பிரபாகரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் தலைமைத்துவ பயிற்சியானது நடாத்தியிருந்தார். பெண்கள் உரிமை சமந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு எமது நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் திட்ட முகாமையாளர் உட்பட எமது சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பான முறையில் பயனுள்ள செயலமர்வை நடாத்திய திரு. ஸ்டான்லி பிரபாகரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *