சுயதொழிலுக்கு ஓர் களம் ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது.

அந்த வகையில்
எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட தையல் சுயதொழில் முயற்சியாளரான திருமதி.யோகநாயகி அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது.

இச்செயற்பாட்டிற்காக நிதி அனுசரணை வழங்கிய எமது அறக்கட்டளை உறவான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு.மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைத் தரம் உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பங்களிப்பை மேற்கொள்வதாகவும் அமையும். எனவே, நீங்களும் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதன் மூலம் தனிமனித வலுவூட்டலைத் தாண்டிய குடும்பங்களை முன்னேற்றலாம்.

மேலதிக தொடர்பிற்கு:
https://wa.me/94776770780

நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,
மட்டக்களப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *