மாதம் ஒரு களம்…

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் தொடர்பான விழிப்புணர்வை அவர்களுக்கான வாழ்வியல் திறன்களையும் வழங்கும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம்.

அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்திற்குச் சென்று அங்கு குழு மேம்பாடு எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் பயிற்சி நடாத்தப்பட்டது.

இவ்வாறான குழு மேம்பாடு செயற்பாடுகளை மேற்கொண்டு இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல்களுக்கு எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும்.

இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.