மாணவர்களுக்கான கருத்தரங்குகள் !

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பிரத்தியேகமான கருத்தரங்குகளை நடாத்துவதன் மூலம் பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் கருத்தரங்குகள் அவர்களுக்கான ஊக்குவிப்பாகவும் அமையும்.

அந்த வகையில் களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 120 மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாட கருத்தரங்குகளும் அம்பிளாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள கலைமகள் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயிலும் 40 மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான கருத்தரங்கும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக உதவி புரிந்த நியூசிலாந்தில் வசிக்கும் திருமதி. கணேசராணி ரவீந்திரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *