சிறுவர்களே நாளைய தலைவர்கள்

முல்லைதீவு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களையும், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பயிலுனர்களையும் இணைத்து சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

சிறுவர்களே நாளைய தலைவர்கள் எனவே இவ்வாறான ஒன்றுசேர்ந்த நிகழ்வுகளே இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் தற்கால இயந்திரமய வாழ்க்கையில் இறுகிப்போன மனங்களிற்கு ஒரு ஆறுதலாகவும், ஒன்றுசேர்வதன் மூலமாக சமூக சிந்தனைகள் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சந்தோசமாக இன்றைய நாளை கொண்டாடினார்கள். பிள்ளைகளை சந்தோசப்படுத்திய இந் நிகழ்விற்கு உதவி அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *