கரம் கொடுப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் Calculator ஒன்றும் எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *