களவிஜயமும் திட்ட மேற்பார்வையும்

மனித நேய நம்பிக்கை நிதியமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை அவர்களின் பிரதிநிதிகள் வருகைதந்தனர். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி சிரஞ்சீவி அவர்களுடன் அவரது கணவர் திரு.சிரஞ்சீவி வருகைதந்து அனைத்து செயற்பாடுகளையும் நேரடியாக மேற்பார்வை செய்தனர்.

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடான கல்விக்கான செயற்பாடுகளாக வந்தாறுமூலை கண்ணகி வித்யாலயத்தில் தரம் 5 மாணவர்களிற்கான செயற்பாடுகள் மற்றும் கிரான் மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிற்கான மேலதிக வகுப்பு செயற்பாடுகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்து செயற்பாடுகள் பற்றிய தெளிவினைப் பெற்றிருந்தனர்.

இந்த வேளையில் மாணவர்களுகளின் பெறுபேறுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களுக்கான மேலதிக வகுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் காலங்களில் இம் மாணவர்களுக்கான மேற்படி செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *