கள செயற்பாடுகளின் அடுத்த கட்ட நகர்வு..

அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை களங்கள் தோறும் நாம் நடாத்தி வருகின்றோம். அந்தவகையில்
பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான கணினி விழிப்புணர்வு செயற்பாடுகளும் வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமப் பிரதேசத்தில் தொடர்கட்டங்களாக நடாத்தப்பட்டு வந்த கணினி பயிற்சி வகுப்பின் இறுதிநாள் நிகழ்வு மாவிலங்கத்துறையில் இடம்பெற்றது.

எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர், மாவிலங்கத்துறை கிராம சேவை உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத் தலைவருள்ளிட்ட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பயிற்சியின் இறுதி நிகழ்வைத் தொடர்ந்து அம் மாணவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை சிறப்பானதாகும்.

இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடு வெற்றிகரமாக இச்செயற்றிட்டத்தை நடாத்திய எமது விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் பயிற்சி இணைப்பாளர் திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *