வலுவூட்டலுக்கான ஒரு அடித்தளம் ..

எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன் றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.

ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தைச் சேர்ந்த செல்வன். சுசித்திரன் சுகிர்தன் மற்றும் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.தினேஸ்குமார் லிதேஸ் ஆகிய இரு மாணவர்களும் தமக்கான துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர், மாவிலங்கத்துறை கிராம சேவையாளர் உள்ளிட்ட எமது அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் எமது பயனாளிகள் இருவருக்கான நன்கொடை அனுசரணையை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிய
நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் திருமதி.கணேசராணி ரவீந்திரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் நாம் பெருமிதமடைகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *