நாளைய தலைவர்களுக்கான மேலதிக வலுவூட்டலுக்காக ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை நடைமுறுப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில், கறுவாக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தின் உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களை மேற்பார்வை செய்யும் வண்ணம் எமது திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களின் பெறுபேறுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களுக்கான மேலதிக வகுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் காலங்களில் இம் மாணவர்களுக்கான மேற்படி செயற்பாடுகளை தொடர்ச்சியாக எவ்வாறு நடாத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய நியூசிலாந்து நாட்டில் திரு.திருமதி.கணேசராணி ரவீந்திரன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *