தடைகள் களைவோம்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக தேவைப்பாடுடைய மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றது.

அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்டு எம்மால் பொறுப்பெடுக்கப்பட்ட, உயர்தரம் பயிலும் 4 மாணவர்களின் கோரிக்கைக்கமைவாக அவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் கள சேவையாளர்களால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது இவ்வாறான செயற்பாடுகளுக்காக அனுசரணையை வழங்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவ்வாறே வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒவ்வொரு தேவையுடைய மாணவரும் வாழ்வில் வறுமை எனும் தடையை கடக்க நீங்களும் எம்முடன் இணைந்திடுங்கள்

மாற்றம் என்பது எம்மிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியது !

மேலதிக விபரங்களுக்கு,
https://wa.me/+94776770780

நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *