திறமைகளிருந்தும் தடுமாறும் இளந்தளிர்களின் எதிர்காலம்

திறமையான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டங்களின் மூலம் ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்குதல் , மாணவர்களுக்கான சத்துணவு வழங்குதல் போன்ற செயற்பாடுகளினூடாக பாலர் பாடசாலைகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம் .

அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காகவும் எதிர்வரும் ஆண்டிற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் எம்மால் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள கௌரி பாலர் பாடசாலைக்கான களவிஜயம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. இப் பாடசாலைக்கான நன்கொடை உதவிகள் இலண்டனில் வசிக்கும் திரு.என்.செந்தில்குமரன் அவர்களால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

பாலர் பாடசாலையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு மாணவர்களுக்குரிய விளையாட்டுச் செயற்பாடுகளுக்கான பௌதிக வளம் இன்மை ஒரு பாரிய சவாலாக காணப்படுகின்றதாக ஆசிரியர் தெரிவித்தார். அத்துடன் உள்ளக விளையாட்டுப் பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *