இயற்கையை பாதுகாப்பதே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அடிப்படை

இயந்திர மயமாக்கப்பட்ட இன்றைய உலகில் எதிர்கால சந்ததிக்கு மாசுக்களற்ற புதிய சூழலொன்றை வழங்குவதற்கு இன்றைய இயற்கையைக் காப்பதொன்றே வழிமுறையாகும். அதனை உணர்த்தும் வகையில் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் (World Environmental Day) ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்படுகிறது.

இந்நாளை முன்னிட்டு, எமது Vivekananda College of Technology (VCOT) மற்றும் Amirda நிறுவனமும் இணைந்து “கழிவுப்பொருட்களின் மீள்பயன்பாடு (Waste Recycling)” என்ற செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது.

இதற்கான காரணம், இலங்கையில் நாள் ஒன்றுக்கு திண்மக்கழிவாக 7000 தொடக்கம் 8000 மெற்றிக்தொன் சேர்கின்றது. இதில் உக்க முடியாத Polythene and plastic கழிவுப்பொருட்கள் 6.5% to 8% காணப்படுகின்றது. இவற்றினை நிலத்தில் புதைப்பதினால் நிலம் பாதிப்படைகின்றது. காற்றில் பரவி நீர்நிலைகளில் தேக்கமடைந்து அதன்மூலமான பாதிப்பு அதனை தவிர இவற்றினை எரிப்பதனால் வளி மாசடைகின்றது. இவை அனைத்தும் எமக்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் உயிர்வாழ்க்கைக்கான அச்சுறுத்தலாகும்.

இவற்றினைக் கருத்தில் கொண்டே நாம் விழிப்புணர்வு செயற்பாடாக மட்டுமல்லாமல் இவற்றினை மீள்பயன்பாடு செய்வதன் மூலம் ஒரு சிலருக்கான வருமானத்தையும் ஏற்படுத்தலாம் என்ற தொனிப்பொருளில் இச் செயற்பாட்டினை இந்த சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் ஆரம்பித்து வைத்துள்ளோம்.

🔹 மீள்பயன்பாடு என்பதின் நோக்கம்
ஒருதடவை பாவனையின் பின்னர் குப்பையாக சேரும் பொருட்களில் உக்க முடியாத கழிவுப்பொருட்களை மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தும் முறையே மீள்பயன்பாடாகும். இது சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைக்கும் ஒரு முக்கிய வழிமுறையாகும்.

🔹 மீள்பயன்பாட்டின் முக்கியத்துவம்
• இயற்கை வளங்களை பாதுகாக்கிறது
• பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது
• வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது
• கழிவுப்பொருட்களை குறைக்கிறது
• பசுமையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.

🔸 மாணவர்கள் மற்றும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய நடவடிக்கைகள்
• பிளாஸ்டிக், காகிதம், உலோகம் போன்றவற்றை தனித்தனியாக சேகரித்தல்
• இந்த கழிவுகளை கலைப்பணி பொருட்களாக அல்லது பயன்படுத்தத்தக்க பொருட்களாக மாற்றி பயன்படுத்துதல்
• ‘Reduce, Reuse, Recycle’ எனும் மூன்று நிலைப்பாடுகளையும் நடைமுறைப்படுத்துதல்.

நாம் தற்போது நடைமுறைப்படுத்தவிருப்பது

  1. குடிநீர் பானங்கள் வரும் பைக்கற்றுக்கள் (tetra packs)
    இவற்றினுள் இருக்கும் multi-layer laminates (plastic + aluminum) ஆனது 500 தொடக்கம் 1000 வருடங்கள் வரை உக்கிப் போகாமல் அப்படியே இருக்கும். எனவே இவற்றினை அன்பளிப்புபொருட்கள் வழங்குவதற்கான பைகளாகவும், ஏனைய அலங்கார பொருட்களாகவும் மாற்றியமைத்தல்.
  2. தற்போது நிகழ்வுகளிற்கு பயன்படுத்தும் வெனர் (PVC Flex Banner (Polyvinyl Chloride)
    இதுவும் ஒருவகை உக்கிபோகாத பிளாஸ்ரிக் கழிவுதான். எனவே இவற்றினை பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தும் பைகளாக மாற்றியமைத்து குறிப்பிட்ட காலங்களிற்கு பயன்படுத்தலாம்

இந்த 2 கழிவுபொருட்களும் ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் கழிவாக வீசப்படுகின்றது. எனவே இவற்றினை சேகரிக்கும் போது மூலப்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. தற்போது ஆரம்ப கட்டமாக இந்த 2 கழிவுப்பொருட்களையும் மீள்பாவனைக்கு பயன்படுத்துவதற்கான நுட்பங்களையும் அவற்றினை உருவாக்குவதற்கான கருவிகளையும் முதலீடு செய்தால் இது ஒரு வருமானத்தினையும் தருவதோடு, சூழலில் தேக்கமடையும் கழிவுகளையும் சிறிதளவேனும் குறைப்பதற்கான வழிமுறையாக அமையும்.

எமது இந்த நிகழ்வினை அடுத்து சுற்றாடல் பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் மாநகர முதல்வர் ஆகியோரிடம் எமது இந்த விழிப்புணர்வு முன்மொழிவினை மேற்கொண்டிருந்தோம்.
அத்தோடு தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் இவ் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

கழிவுப்பொருட்களை மீள்பயன்பாடு அல்லது மீள்சுழற்சி செய்வதற்கான முறைமைகளையும், விழிப்புணர்வுகளையும் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளவிருக்கின்றோம்.

இச்செயற்பாட்டில் எம்முடன் இணைந்து நீங்களும் பயணிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
https://wa.me/+94777105569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *