தலைமைத்துவம் ஒரு நிகழ்வல்ல!!

தலைமைத்துவம் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இன்றைய மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி அவர்களை நாளைய சமுதாயத்தின் சிறந்த தலைவர்களாக உருவாக்குவது எமது கடமைப்பாடாகும்.

அதற்கிணங்க எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது இன்றைய தினம் இடம்பெற்றது.
எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப்பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பான முறையில் பல்வேறு செயற்பாடுகளூடாகத் தலைமைத்துவப்பண்புகளும், நேரமுகாமைத்துவம் போன்ற விடயங்களும், விளையாட்டுகளும் உள்ளடங்கலாகத் தலைமைத்துவப்பயிற்சியானது மாணவர்களுக்கு பொருத்தமான முறையில் எமது திட்டமுகாமையாளரினால் செவ்வனே நடாத்தப்பட்டது. இன்றைய மாணவர்களுக்காக நாம், இவ்வாறு செலவிடும் ஒவ்வொரு நிமிடங்களும் நாளை ஒரு சிறப்பான தலைவரை உருவாக்குவதில் பெரிதும் பங்களிப்புச்செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *