அறக்கட்டளையின் பிரதேசமட்ட நகர்வு

இன்றைய சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் நாம் பல்வேறுபட்ட சமூக மட்டத்தினருடனும் இணைந்து செயற்படுகின்றோம். அதனடிப்படையில் பிரதேச செயலகங்களுடனான கலந்துரையாடல் என்பது எமது அறக்கட்டளையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இன்றியமையாததாகும்.

அதற்கிணங்க ஆரையம்பதி மற்றும் பட்டிப்பளைப் பிரதேச செயலகங்களில் இடமாற்றம் பெற்று வருகை தந்த புதிய பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் பிரிவிற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு அவர்களுடனான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான எமது நாட்காட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *