அடிப்படைக் கணினிப் புரட்சி இரண்டாம் அத்தியாயம் !

பின் தங்கிய கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை கணனி அறிவினை வழங்கும் வண்ணம், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக மனிதநேய நம்பிக்கை நிதியத்தினரின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியினால் பயிற்சி செயலர்வுகள் தொடர் கட்டங்களாக நடாத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கித்துள் மற்றும் கரடியனாறு பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சிக்கான இரண்டாவது செயலமர்வு இன்றைய தினம் கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்றது.

பயனுள்ள வகையில் இன்றைய செயலமர்வை முன்னெடுத்துச் சென்ற விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு எமது அறக்கட்டளையினூடாக நிதி அனுசரணை வழங்கும் மனிதநேய நம்பிக்கை நிதியத்தினருக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *