உதவி கோரல்

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வருடந்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது.

அதற்கிணங்க பாடசாலை ஆரம்பிக்கப்படவிருப்பதால் எமது மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும்.

அந்த வகையில் தாங்கள் முன்வந்து வழங்கும் சிறு உதவியானது (LKR 5,000) வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவரின் கல்வியின் பின்னணியிலும் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலதிக தொடர்பிற்கு

நிருவாகம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,
மட்டக்களப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *