ஆயுதம் கல்வியே !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது. கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வியில் எம்மாலான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும்.

அந்த வகையில் இன்றைய தினம் எமது அறக்கட்டளையினூடாக அடையாளம் காணப்பட்ட 2 பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் எமது திட்ட முகாமையாளரின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பானதாகும்.

வறுமையிற் கல்வியே உயர்த்திடும் ஏணியாகும். அதற்கிணங்க தாங்கள் எம்முடன் இணைந்து வழங்கும் சிறு பங்களிப்பில் பல வறிய மாணவர்களின் வாழ்வும் உயரும் என்பது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *