Admin

Towards Social Transformation through Community Colleges

சமுதாயக் கல்லூரிகளூடான சமூக மாற்றத்தை நோக்கி ..

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக நாம் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில், பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தி சமுதாயக் கல்லூரிகளை நாம் உருவாக்கி அப்பிரதேசத்தின் மாணவர்களுக்கான Office Managment & IT மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல்…

மேலும் படிக்க
School bags for the students of Annai Sri Sarada Nilayam

அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் Lyka Gnanam Foundation அமைப்பினரால் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகளுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு…

மேலும் படிக்க
One ultimate goal

தொலைநோக்கம் ஒன்றே….!

தூரநோக்கத்தின் அடிப்படையில் வேறுபட்டாலும் கூட தனிமனித வலுவூட்டலினூடான சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை ஏற்படுத்துவதே எமது அமைப்புகள் அனைத்தினதும் தலையாய குறிக்கோளாகும். அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்தின் நிறுவனங்களின் இவ்வருடத்திற்கான இரண்டாவது காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு ஒவ்வொரு நிறுவனங்களுக்கும்…

மேலும் படிக்க
Platform for Inner Excellence

உள்ளார்ந்த ஆளுமைக்கு ஓர் களம்..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் பின்தங்கிய மாணவர் சமுதாயத்தை மையப்படுத்தி நடைமுறைத்தப்படும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகள் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடாது , யோகா, கராத்தே என இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தம்மை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப் போட்டியானது புதுக்குடியிருப்பு…

மேலும் படிக்க
Stones and Words

கற்களும் சொற்களும் கல்விக்கான அறிவுத்தளம்..

இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயமானது, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஆலயத்தின் பொருளாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது. எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் கல்வி…

மேலும் படிக்க
Encouraging Future Karate Champions

இன்றைய மேடைகள் ; நாளைய களங்களுக்கான அடித்தளங்கள்….

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள், கராத்தே, யோகா பயிற்சி என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இலங்கை கராத்தே சம்மேளனத்தின் 50 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு புதுக்குடியிருப்பு மத்திய…

மேலும் படிக்க
Livelihood Support

வலுவூட்டலை நோக்கிய வாழ்வாதார மேம்பாட்டிற்கு..

எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக கல்வியை மட்டுமல்லாது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கான வலுவூட்டலை வழங்குவதே எமது நோக்கமாகும். அதனடிப்படையில் எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டற் செயற்பாட்டினூடாகத் தெரிவு செய்யப்பட்டு எமது அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவி ஒருவரின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி எமது நன்கொடையாளரான திரு. ரகுபதி நடராஜா அவர்களினால் எமது அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அவர்கள் வாழ்வாதாரமாகப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதையடுத்து அதன் மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியைப்…

மேலும் படிக்க
Environmental Activities

இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பு ..!

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.அந்த வகையில் பசுமைப் புரட்சித் திட்டம் எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்றிட்டங்களை எமது சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியினூடாக முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தின் 3ம் குறிச்சி கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணைப்பாளர் திருமதி.ரஜனி பாஸ்கரன் அவர்களின் தலைமையில்…

மேலும் படிக்க

கல்விக்கான மேலதிக வலுவூட்டல்….!

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில்,…

மேலும் படிக்க
Career Guidance

தொழில் வழிகாட்டலுக்கான ஓர் பாதை

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பல்வேறு செயற்பாடுகளின் மூலம் மாற்றத்திற்கான வலவூட்டலினை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களை மையப்படுத்தியதாக அவர்களுக்கான வழிகாட்டலை வழங்கும் வண்ணம் விசேட கருத்தரங்கு ஒன்று UK இல் பிரபல்யமான கல்லூரிகளான Writtle College , IOM International Business School போன்றவற்றில்…

மேலும் படிக்க