Admin

Career Guidance

தொழில் வழிகாட்டலுக்கான ஓர் பாதை

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பல்வேறு செயற்பாடுகளின் மூலம் மாற்றத்திற்கான வலவூட்டலினை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களை மையப்படுத்தியதாக அவர்களுக்கான வழிகாட்டலை வழங்கும் வண்ணம் விசேட கருத்தரங்கு ஒன்று UK இல் பிரபல்யமான கல்லூரிகளான Writtle College , IOM International Business School போன்றவற்றில்…

மேலும் படிக்க
Vocational Education

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக ஒரு செயற்பாடாக மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் ஒழுங்கமைப்பின் கீழ் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய 15 மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும் இணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. NVQ தொழிற்கல்வி முறைமையின் கீழ்…

மேலும் படிக்க
vcot

காரைதீவிலும் கணினி கற்கை கூடம் ஆரம்பம் …

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக நாம் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில், பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தி சமுதாயக் கல்லூரிகளை நாம் உருவாக்கி வருகின்றோம். அதனடிப்படையில் இவ்வாறான பிரதேசங்களில் கணினி கூடங்களை மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்படுத்தி வருகின்றது. அதன் பிரகாரம் முல்லைதீவு…

மேலும் படிக்க
certificate ceremony

நாளைய வெற்றிக்கான அடித்தளமாய் இன்றைய சிறு மேடை…

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்காகவும் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பினைத் தவறவிட்டவர்களுக்காகவும் விசேடமான பயிற்சிகளாக வாழ்வியலும் வழிகாட்டலும், அடிப்படைக் கணினி மற்றும் அலுவலக முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளை உருவாக்கி காலத்தின் தேவைக்கேற்ற வகையில் அதனை பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின், புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உள்ளடங்கலாக Office management & IT மற்றும் CCTV Installation & PABX Technician பயிற்சி நெறிகளைப்…

மேலும் படிக்க
skill development

அவர்களின் எதிர்காலம் அவர்களிடமே….!

எமது அறக்கட்டளையினூடாக கனடாவைச் சேர்ந்த திரு.கோபால் பகீரதன் அவர்களின் அனுசரணையுடன் இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மாதர் அபிவிருத்தி சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் பயிலும் 20 பெண்களுக்கான விசேட தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி செயலமர்வானது மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பின் கீழ் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும்…

மேலும் படிக்க

கல்விக்குக் கரம் கொடுப்போம்

பின்தள்ளப்பட்ட கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்னும் தொனிப்பொருளில் வருடாந்தம் பல்வேறு செயற்றிட்டங்களை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கும் செயற்பாட்டினை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில், இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் கல்வி செயற்பாட்டில் தமது பங்களிப்பை…

மேலும் படிக்க

Bringing Smile with every stitch

The Vivekananda Community Foundation actively supports children’s homes and shelters through various impactful initiatives. These efforts include providing nutritious meals, distributing educational supplies, and gifting new clothing during festivals. With strong backing from diaspora communities, the Foundation ensures these programs bring hope to underprivileged children. We deeply appreciate our international supporters, who generously collaborate with…

மேலும் படிக்க

தன்னார்வ தொண்டர்களுடனான கலந்துரையாடல்

இன்றைய இளம் தலைமுறையினரிடையே சேவை மனப்பாங்கை கட்டியெழுப்புவது எமது கடமையாகும். அந்த வகையில் எம்முடன் இணைந்து பணியாற்றும் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்களுடனான வருடாந்த கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டலை அடுத்து எதிர்வரும் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றியும் அறக்கட்டளையுடனான அவர்களின் பயணம் தொடர்பிலும் தெளிவாகக் கலந்துரையாடப்பட்டது. எம்முடன் இணைந்து செயலாற்றும் எமது அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க

விவேகானந்த கலாச்சார நிலைய பணிப்பாளரின் வருகை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது இளைஞர் யுவதிகளின் வாழ்வின் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வியை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் ஒரு பகுதியான விவேகானந்த கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து எமது கல்லூரியின் பயிற்சிநெறிகள் மற்றும் எமது செயற்பாடுகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் பயிற்சிகள் பற்றிய விளக்கங்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டது. இவ்வாறான திறன்…

மேலும் படிக்க

கனவுகளெல்லாம் கற்களின் வழியே ..!!

எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமுதாயத்தில் தேவைப்பாடுடைய பயனாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.புவிக்குமார் தர்மினி ஆகியோரின் மகன் டிலன் என்பவரின் 12 வது பிறந்த தினத்தை முன்னிட்டுஆரையம்பதி செல்வாநகர் பிரதேசத்தில் வசிக்கும் திருமதி.இ.தனலெட்சுமி அவர்களுடைய பூரணமாக்கப்படாமல் தகரத்தினால் இருந்த வீடு திருத்தங்கள் செய்யப்பட்டு கற்களால் பூரணப்படுத்தப்பட்டது. திருமதி.இ.தனலெட்சுமி கணவரைப் பிரிந்த நிலையில் மரக்கறி வியாபாரம் செய்து பாடசாலை செல்லும் இரு…

மேலும் படிக்க