Admin

கிராமங்கள் தோறும் கணினி வகுப்புக்கள் !

கிராமங்கள் தோறும் கணினிப்புரட்சி எனும் தொனிப் பொருளில் கிராமங்களுக்குச் சென்று வாராந்த வகுப்புக்களை நடத்துவதன் மூலம் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கான அடிப்படைக்கணினி அறிவினை நாம் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் உலகம் தொழில்நுட்பத்தின் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்க நம் சமூகத்தில் கணினியினை பயன்படுத்திக் கூட பார்க்காத இளம் சந்ததி இருக்கத்தான் செய்கின்றது. எனவே கிராமந்தோறும் அவர்களை மையப்படுத்தி 3 மாதகாலத்திற்கு ஒரு கிராமத்தில் மடிக்கணினிகள் மூலமாக நடமாடும் பயிற்சியாக நடைபெறும் இச் செயற்பாட்டிற்கு இரண்டாவது கிராமமாக ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட…

மேலும் படிக்க

கழிவுப்பொருளே மூலதனம்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கிராமங்களை நோக்கிய இளைஞர், யுவதிகளின் வலுவூட்டல் செயற்பாட்டின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த சமுதாய கல்லூரியின் இன்னுமொரு செயற்பாடாக நேற்று 22.11.2024 திகதி வள்ளிபுனம் ரேடியன் நிலையத்தில் சிரட்டையிலான கைவினை ஆக்க பயிற்சி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தலைமைதாங்கும் குடும்ப பெண்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ள ஆர்வமாக உள்ள இளம்பெண்கள் என 20 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களிற்கு இவ்வாறாக கழிவுப்பொருட்களை கொண்ட…

மேலும் படிக்க

ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை

எமது மனிதநேய சமுதாய கல்லூரிக்கு கரடியனாறு மகா வித்தியாலயத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கி வைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் எமது திட்ட முகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது அனுசரணையை வழங்கிய அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இராமச்சந்திரன் மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த…

மேலும் படிக்க

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்துரையாடல்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத்தொகை ஒன்றினை மாதாந்தம் வழங்கி வருகின்றது. அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலில் ஒரு புதிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 7 மாணவர்களுடனான கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இத்திட்டம் தொடர்பான பூரண விளக்கங்களும் வழங்கப்பட்டு…

மேலும் படிக்க

பாடசாலை ஒன்றுக்கான Printer.

மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மாணவர்களையும் தாண்டி பாடசாலைகளில் இருந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கமைவாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியினரின் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கான Printer வழங்கப்பட்டது. எமது திட்டமுகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த…

மேலும் படிக்க

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மேலதிக வலுவூட்டல்

மனித நேய நம்பிக்கை நிதியமானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மாணவர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் ஒரு புதிய அத்தியாயமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் வண்ணம் எமக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கமைவாக மாணவர்களைத் தெரிவு செய்யும் வகையில் மாணவர்களது வீடுகளுக்கான கள விஜயமானது நடைபெற்றது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்பாட்டிற்காக…

மேலும் படிக்க

உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நடைமுறைப்படுத்தலூடாகப் பாடசாலைகளின் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளை வருடாந்தம் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கல்லூரிகளை மையப்படுத்தியதாக களுதாவளை, பட்டிருப்பு, பழுகாமம், மண்டூர், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, அரசடித்தீவு, வந்தாறுமூலை, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் 1060 மாணவர்களுக்கான ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் தொழிநுட்பவியல் பாடங்களுக்கான கருத்தரங்குகள் செவ்வனே நடைபெற்றது. இவ்வாறான கருத்தரங்குகள்…

மேலும் படிக்க

தீபாவளி திருநாளை முன்னிட்டு

இருள் அகல ஒளியேற்றி இறைவனை நாடும் தீபத்திருநாளை முன்னிட்டு வருடாந்தம் எம்முடன் இணைந்து பயணிக்கும் இல்லங்களில் வாழும் சிறுவர்களுக்கான ஆடைகளை எமது புலம்பெயர்ந்த உறவுகளின் அனுசரணையுடன் நாம் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் மயிலம்பாவளி வாழும் கலை ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளுக்கான ஆடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட சேவையாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருந்து எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நன்கொடை வழங்கிய அனைத்து நன்கொடை உள்ளங்களுக்கும் எமது அறக்கட்டளை சார்பாக…

மேலும் படிக்க

சமவாய்ப்புடனான கல்விக்கும், திறனுக்கும் சமுதாய கல்லூரி

மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் கோயில்குளம், மாவிலங்கன்துறை, போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையோர் என அனைவரினையும் கருத்தில் கொண்டு இவர்களிற்கான விசேட பயிற்சிகளை வழங்கும் புகலிடம் சமுதாயக் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அமெரிக்க நாட்டு பொறுப்பாளர் திரு.கை.அரவிந்தன் மற்றும் அவரது துணைவியார், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் புகலிடம் சமுதாய…

மேலும் படிக்க

இளைஞர்கள் மாற்றத்தை நோக்கிய சமுதாயக் கல்லூரிகள்…

பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் காணப்படும் இளைஞர் யுவதிகளை முன்னேற்றும் ஒரு செயற்பாடாக இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்ய முடியாத, பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்டு தமது எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கிய இளைஞர், யுவதிகளை அடிப்படையாக கொண்டு மாற்றுக்கல்வி முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் என்ற விதத்தில் தொழில்ப்பயிற்சிகளை வழங்கும் சமுதாயக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இந்த மனிதநேய சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிகஸ்ட பிரதேசமாகவும்,…

மேலும் படிக்க