
வாழ்வியலும் வழிகாட்டலும்..
நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எம்மால் அடையாளப்படுத்தப்படும் தேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட திறன்களின் தொகுப்பே வாழ்க்கை திறன் ஆகும். எமது வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்வதில் வாழ்க்கைத்திறன் பாரிய பங்களிப்பைச் செலுத்துகின்றது, ஆகையால் வளர்ந்து வரும் ஒவ்வொரு இளம் சமுதாயத்தினரும் இப்பயிற்சியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாத தொன்றாகும். அந்த வகையில் திருப்பழுகாமத்தில் தரம் 6 மற்றும் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கையில் ஆர்வத்தினை தூண்டும் வகையில்…