Admin

இவர்களின் புன்னகையில் இறைவனைக் காண..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுத்து வரப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் எமது அறக்கட்டளை உறவுகளான செல்வராஜா மேரி கிறிஷாந்த் ஆகியோரின் பிள்ளைகளான மதீசான் மற்றும் கத்தலியா ஆகியோரின் பிறந்த தினமானது எமது புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுடன் இணைந்து விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தினை அடுத்து எமது அறக்கட்டளை உறவான செல்வராஜா குடும்பத்தினரின் உதவியால் மாணவர்களுக்கான சத்துணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது…

மேலும் படிக்க

அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அவர்களுடன் நாம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கிய பங்காற்றுகின்றது. அந்த வகையில் நாளைய தலைவர்களை உருவாக்குவதில் பாலர் பாடசாலைகள் முக்கியம் பெறுகின்றது. போதியளவு உணவு, கல்வி அறிவு, மேலதிக செயற்பாடுகள் என முறையான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யும் பாலர் பாடசாலைகளுடன் கைகோர்த்து செயற்படுவது எமது தலையாய கடமையாகும் அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டத்தினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இந்த வருடத்திற்குரிய கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது….

மேலும் படிக்க

திறமைகளிருந்தும் தடுமாறும் இளந்தளிர்களின் எதிர்காலம்

திறமையான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டங்களின் மூலம் ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்குதல் , மாணவர்களுக்கான சத்துணவு வழங்குதல் போன்ற செயற்பாடுகளினூடாக பாலர் பாடசாலைகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம் . அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காகவும் எதிர்வரும் ஆண்டிற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் எம்மால் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள கௌரி பாலர் பாடசாலைக்கான களவிஜயம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. இப் பாடசாலைக்கான நன்கொடை உதவிகள் இலண்டனில் வசிக்கும்…

மேலும் படிக்க

திறமைக்கான ஓர் அங்கீகாரம் தொடரும் மேடைகளின் தேடல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு முறையான மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் எமது திட்டங்களினூடாக பாலர் பாடசாலைகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம். அந்த வகையில் 2023 ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கைகளுக்காக மேற்பார்வை செய்யும் வண்ணம் எம்மால் கனடாவில் வசிக்கும் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் குடும்பத்தின் நிதியுதவி கிடைக்கப்பெறும் பலாச்சோலை விபுலானந்தா பாலர் பாடசாலைக்கான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு இவ் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஆண்டில் அவர்களுடனான எமது செயற்பாடுகள் பற்றியும் தெளிவூட்டப்பட்டது. பாலர்…

மேலும் படிக்க

மாற்றத்திற்கான மாணவர் சமுதாயத்தின்ஓர் புதிய அத்தியாயம்

இன்றைய நவீன யுகத்தில் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாததொன்றாகும். சிறு வயது முதல் மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படை கணினி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதாகும். இதற்காக முன்னேற்றகரமான ஒரு தொழில்நுட்ப அறிவுடனான சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் அடிப்படை கணினி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். இதன் பிரகாரம் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல்முகத்துவரத்தில் அமைந்துள்ள துவாரகா பாடசாலைக்கு களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தோம். கணினிப்பயிற்சியின் அவசியம்,…

மேலும் படிக்க

ஒளியேற்றியோருக்கு நன்றிகள் கோடி..

விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து இருள் அகல ஒளி தேவை என்றும் தத்துவத்தை குறிப்பிட்டு ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த நாளினை தான் நாம் தீபாவளி என்று சொல்கிறோம். அந்த வகையில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுளை காண்தற்காக மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கிற்கமைய எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் சமுதாயத்தில் உள்ள தேவையுடையோரை இனம் கண்டு அவர்களுடன் இணைந்து இம்முறை நாம் தீபாவளியை கொண்டாடி அவர்கள் மனங்களை குளிரசெய்தோம். அந்த வகையில் தீபாவளிக்கான உதவியினை…

மேலும் படிக்க

ஒரு நாள் உணவும் விசேட நினைவு தினமும்…

தங்களிற்கு எமது பராமரிப்பின் கீழ் உள்ள இல்லங்களில் தங்கியுள்ள மாணவிகள், பாலர் பாடசாலையில் உள்ள சிறுவர்கள், விசேட தேவையுடையோர் நிலையங்களில் உள்ள உடல், உள வளர்ச்சி குன்றிய சிறார்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள கைவிடப்பட்ட முதியவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் விசேட நினைவு தினங்களில் நீங்கள் வழங்கும் உதவி மூலமாக இவர்களிற்கான ஒரு நாள் உணவு கிடைப்பதுடன் இவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இதற்காக உங்களிற்கான நல்வாழ்வினை இறைவன் வழங்குவார் என்பதுடன் நாமும்…

மேலும் படிக்க

களவிஜயமும் திட்ட மேற்பார்வையும்

மனித நேய நம்பிக்கை நிதியமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை அவர்களின் பிரதிநிதிகள் வருகைதந்தனர். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி சிரஞ்சீவி அவர்களுடன் அவரது கணவர் திரு.சிரஞ்சீவி வருகைதந்து அனைத்து செயற்பாடுகளையும் நேரடியாக மேற்பார்வை செய்தனர். எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடான கல்விக்கான செயற்பாடுகளாக வந்தாறுமூலை கண்ணகி வித்யாலயத்தில் தரம் 5 மாணவர்களிற்கான செயற்பாடுகள் மற்றும்…

மேலும் படிக்க

நலன்புரி பாலர் பாடசாலையில் வாணி விழா

வாணி விழா என்பது கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியிடம் சிறப்பான கல்வியை வேண்டி கொண்டாடப்படுகின்றது. இந் நிகழ்வு பாலர் பாடசாலைகளிலிருந்து கொண்டாடப்படுவது அவசியமாகும். அந்த வகையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வாணி விழா நிகழ்வானது இன்றைய தினம் திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டது. இதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து மாதாந்தம் உதவி வழங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் வசிக்கும்…

மேலும் படிக்க

சிறுவர்களே நாளைய தலைவர்கள்

முல்லைதீவு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களையும், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பயிலுனர்களையும் இணைத்து சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. சிறுவர்களே நாளைய தலைவர்கள் எனவே இவ்வாறான ஒன்றுசேர்ந்த நிகழ்வுகளே இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் தற்கால இயந்திரமய வாழ்க்கையில் இறுகிப்போன மனங்களிற்கு ஒரு ஆறுதலாகவும், ஒன்றுசேர்வதன் மூலமாக சமூக சிந்தனைகள் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சந்தோசமாக இன்றைய நாளை…

மேலும் படிக்க