Admin

நாளைய தலைவர்களுக்காய், நாம் !

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பின் தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த உதவித்தொகையொன்றினை வழங்குவதன் மூலம் அவர்களது கல்விக்கான எமது பங்களிப்பை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் திரு.சுப்பிரமணியம் ராஜு கபீரியல் அவர்கள்…

மேலும் படிக்க

வாழ்வியலும் வழிகாட்டலும்

அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காகக் கையாளப்படும் வாழ்வோடு இணைந்த முறையே வாழ்க்கை திறனாகும். முறையானதோர் இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் வாழ்க்கைத்திறன் பாரியளவிலான தாக்கம் செலுத்துவது இன்றியமையாததொன்றாகும் அந்த வகையில் முல்லைத்தீவு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வாழ்வியலும் வழிகாட்டலும் எமது பயிற்சி உத்தியோகத்தர் திரு.ஜெயம் ஜெகன் அவர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதோடு பிரச்சினைகளைத் தீர்த்தல் தொடர்பான வழிகாட்டல் பயிற்சி செயற்பாடுகளூடாக மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இவ்வாறான வாழ்வியல் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக…

மேலும் படிக்க

சவால்களை தாண்டி..

பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இவ்வாண்டிற்குரிய இரண்டாவது கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. எமது 5 பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் 7 ஆசிரியர்களும் கலந்துகொண்டதோடு, சென்ற கலந்துரையாடலுக்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதிகளில் அவர்களுடனான எமது செயற்றிட்டங்கள் பற்றி தெளிவூட்டப்பட்டது. அத்தோடு அவர்களின் வேண்டுகோளாக அவர்களிற்கு ஆங்கிலம் மற்றும் கணினி அத்தோடு மூன்றாம் மொழி சிங்களம் போன்றவற்றில் தங்களுக்கான அடிப்படை அறிவினை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டனர். அத்தோடு அவர்கள் பாடசாலையில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய பல விடயங்களை…

மேலும் படிக்க

மாதவம் !

தொட்டிலில் சேயாகி, தொலைவுகளை மாணவியாய் விழி துடைக்கும் தோழியாய், விரல் கோர்க்கும் காதலியாய், வழித்துணை காண் தாரமாய் – அவள் வாழ்வளிக்கும் தாயாகி ஈற்றில் ஒளிபடைக்கும் ஓர் சமூகம் தனை வளர்க்கும் தலைவியாய் பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என வாழ்வின் ஒவ்வொரு படியிலும் துணைநிற்பவள் பெண். அதன் பிரகாரம் பெண்மையின்றி அமையாது பேர் உலகு என்பர். அதற்கிணங்க, எமது சமுதாயத்தின் மகளிருக்கான அங்கீகாரத்தை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் எமது…

மேலும் படிக்க

சேவையாளர்களின் அடுத்த கட்ட நகர்வு

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வியல் பயிற்சி பட்டறை ஆனது இரண்டு வார காலங்களாக இந்தியாவில் இடம் பெற்றது. இப்பயிற்சியின் மூலமாக வாழ்வில் வழி தெரியாமல் தடுமாறும் இளைஞர் யுவதிகள், பாடசாலையினை விட்டு இடை விலகிய மற்றும் உயர்தரம், சாதாரண தர பரீட்சை போன்றவற்றில் சித்தி அடையாமல் பாதை மாறி செல்லும் மாணவர்கள் மற்றும் வீட்டில் முடங்கி இருக்கும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்காகவும் இளவயது திருமணத்தினை தடுத்து அவர்களுக்கான தொழிலுக்காக வழி காட்டுதல்…

மேலும் படிக்க

“கேடில் விழுச் செல்வம் கல்வி”

கல்விக்கு வறுமை தடையில்லை என்பதற்கிணங்க இன்றைய தினம் மட் / திக்கோடை கணேச வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தரம் 1 தொடக்கம் 11 வரையான 61 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் கலந்து கொண்டமை சிறப்பானதாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்காக எமக்கு கரம் கொடுத்த எமது புலம்பெயர் உறவுகளாகிய கனடாவில் வசிக்கும் திரு.தினேஸ் குமாரவேலு மற்றும் திரு….

மேலும் படிக்க

ஜீவானந்தா.. பெண்களுக்காய் ஓர் இல்லம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது ஆறு திட்டங்களினூடாகப் பல்வேறு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத்திட்டம் மற்றும் விசேட தேவையுடையோர்க்கான திட்டங்களின் மூலம் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமதுbபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 10 சிறுமிகள் மற்றும் 10 முதியவர்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு எமது மாணவர்களைப்…

மேலும் படிக்க

ஆயுதம் கல்வியே !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது. கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வியில் எம்மாலான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் இன்றைய தினம் எமது அறக்கட்டளையினூடாக அடையாளம் காணப்பட்ட 2 பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் எமது திட்ட முகாமையாளரின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பானதாகும். வறுமையிற் கல்வியே உயர்த்திடும் ஏணியாகும். அதற்கிணங்க தாங்கள் எம்முடன் இணைந்து வழங்கும்…

மேலும் படிக்க

சக்தி பாலர் பாடசாலையினரின் தைப்பொங்கல் விழா

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் வந்தாறுமூலை/ சக்தி பாலர் பாடசாலையில் தைத்திருநாள் கொண்டாட்டமானது வெகு விமரிசையாக இடம்பெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். சக்தி பாலர் பாடசாலைக்காக தமது அனுசரணையை வழங்கும் கனடாவில் வசிக்கும்…

மேலும் படிக்க

உதவி கோரல்

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வருடந்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது. அதற்கிணங்க பாடசாலை ஆரம்பிக்கப்படவிருப்பதால் எமது மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் தாங்கள் முன்வந்து வழங்கும் சிறு உதவியானது (LKR 5,000) வறுமைக்கோட்டின்…

மேலும் படிக்க