Admin

சாதனையாளர்களின் சங்கமம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சமூக மாற்றத்திற்கான பல்வேறு மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் எம் உறவுகளால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெறும் மாணவர்களில் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. எமது அறக்கட்டளை உறவுகளான திரு. லவன் சிவராஜா மற்றும் அவரது துணைவி திருமதி. ஸ்ரீநிதி சுப்பிரமணியம், ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அதிபர், பிரதேச செயலகத்தில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடன் பணிசெய்யும் உத்தியோகத்தர்கள் மற்றும் எமது அனைத்து…

மேலும் படிக்க

இலண்டன் கனகதுர்கை அம்மன் ஆலயத் தலைவரின் மட்டக்களப்பு விஜயம்

இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்காக இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினர் ஆலயத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கி சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மனிதநேயப் பணிகளை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதேசத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களைப் பார்வையிடும் வண்ணம் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தலைவர் வைத்தியகலாநிதி. வே. பரமநாதன் அவர்கள்,அறங்காவலர் சபை உறுப்பினர் பேராசிரியர்.ஸ்ரீரங்கன் அவர்கள், அறங்காவலர் சபை உறுப்பினர் திரு. சிவலோகன் அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின்…

மேலும் படிக்க

மாதிரி பாலர் பாடசாலையில் அறக்கட்டளை உறவினரின் பிறந்த தினம்

சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து பராமரித்து வருகின்றது. அந்தவகையில் எமது அறக்கட்டளை உறவான அமெரிக்காவில் வசிக்கும் திரு.திருமதி.தர்மிகா ராஜ் அவர்களின் மகளாகிய செல்வி.அனிக்கா ராஜ் அவர்களின் 5 வது பிறந்த தினம் திருநீற்றுக்கேணி/நலன்புரி பாலர் பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதோடு பிறந்த தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலை வளாகத்தினுள் அறக்கட்டளையினரால் மரநடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எமது பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து…

மேலும் படிக்க

எமது திட்டத்தில் மேலும் ஐந்து புதிய மாணவர்கள்

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக செங்கலடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும்…

மேலும் படிக்க

நன்கொடையாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையில் திருமதி.தாரணி ராம்ராஜ் அவர்களின் பிறந்த தினம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினரால் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன்…

மேலும் படிக்க

அடிப்படைக் கணினிப் புரட்சி இரண்டாம் அத்தியாயம் !

பின் தங்கிய கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை கணனி அறிவினை வழங்கும் வண்ணம், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக மனிதநேய நம்பிக்கை நிதியத்தினரின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியினால் பயிற்சி செயலர்வுகள் தொடர் கட்டங்களாக நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கித்துள் மற்றும் கரடியனாறு பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சிக்கான இரண்டாவது செயலமர்வு இன்றைய தினம் கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்றது. பயனுள்ள வகையில் இன்றைய செயலமர்வை…

மேலும் படிக்க

எமது பாலர் பாடசாலைகளின் இந்த ஆண்டிற்கான முதல் நகர்வு..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றது. இன்றைய சிறுவர்கள் முறையான விதத்தில் பயிற்றுவிக்கப்படும் போது, கட்டியெழுப்பப்படும் திறமையான மாணவர் சமுதாயமானது நாளை சிறந்த தலைவர்களை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அந்த வகையில் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இவ்வாண்டிற்குரிய முதலாவது கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. எமது 5 பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் 10 ஆசிரியர்களும் கலந்துகொண்டதோடுசென்ற ஆண்டிற்கான ஆவணங்களின் சமர்ப்பித்தலைத் தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதிகளில் அவர்களுடனான…

மேலும் படிக்க

தலைமைத்துவம்! ஒரு தொடர்ச்சியான செயற்பாடு

முறையானதோர் சமுதாயத்தின் நிலைத்திருப்பிற்கு சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்ட ஓர் தலைவரின் வழிகாட்டல் அவசியமாகின்றது.அவ்வாறானதொரு சிறந்த தலைவரின் உருவாக்கமானது பல பயிற்சிகள், அனுபவங்கள், வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். அதற்கிணங்க, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஓர் திட்டமாக எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தில் தலைமைத்துவப் பயிற்சியானது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான இரண்டாவது செயலமர்வு இன்றைய தினம் கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

மேலும் படிக்க

விவேகானந்த குடும்பத்தினருக்கான இயலுமை விருத்திச் செயலமர்வு

ஆளுமைமிக்கதோர் சமுதாயத்தின் உருவாக்கத்திற்குத் திறன்மிக்க சேவையாளர்களின் தேவை இன்றியமையாததாகும். அவ்வாறான திறன்களை விருத்தி செய்யுமுகமாக விவேகானந்த குடும்பத்திலுள்ள சேவையாளர்களுக்கான இயலுமை விருத்திப் பயிற்சிப்பட்டறையானது இன்றைய தினம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம் உள்ளிட்ட சேவையாளர்கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். கிழக்கு திறந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கான விரிவுரையாளர் திரு.ஞானரெட்ணம் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதோடு பயிற்சியைச் சிறப்பான முறையில் முன்னெடுத்து சென்றார். வாழ்க்கை திறன்கள் பற்றிய…

மேலும் படிக்க

வாழ்வியலும் வழிகாட்டலும்..

நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எம்மால் அடையாளப்படுத்தப்படும் தேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட திறன்களின் தொகுப்பே வாழ்க்கை திறன் ஆகும். எமது வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்வதில் வாழ்க்கைத்திறன் பாரிய பங்களிப்பைச் செலுத்துகின்றது, ஆகையால் வளர்ந்து வரும் ஒவ்வொரு இளம் சமுதாயத்தினரும் இப்பயிற்சியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாத தொன்றாகும். அந்த வகையில் திருப்பழுகாமத்தில் தரம் 6 மற்றும் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கையில் ஆர்வத்தினை தூண்டும் வகையில்…

மேலும் படிக்க