முழுவதுமாகத் தீர்க்க முடியாதெனினும்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகக் காணப்படும் ஆலங்குளம் கிராமம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட சிரமத்தை எதிர்நோக்கும் அதிகஷ்டப் பிரதேசமாகும். இக்கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரியதொரு பிரச்சினையாகும். அந்தவகையில், ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் முதன் முதலாக பரிசளிப்பு விழாவினை நடாத்தவிருக்கும் அதேவேளை அந்நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் போத்தலை பரிசாகக் கொடுப்பதற்காக எமது அறக்கட்டளையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வேண்டுகோளுக்கிணங்க எமது அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஆரம்பப்பிரிவு…

மேலும் படிக்க

விவேகானந்த பூங்கா திறப்பு விழா

சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க “உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன ; நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” அந்த வகையில் சமூக நலன்புரி அமைப்பு, திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் எண்ணங்களின் வலிமையின் வழியே உருவாகிய எமது விவேகானந்த பூங்காவின் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத்…

மேலும் படிக்க

வலுவூட்டலுக்கான ஒரு அடித்தளம் ..

எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன் றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தைச் சேர்ந்த செல்வன். சுசித்திரன் சுகிர்தன் மற்றும் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.தினேஸ்குமார் லிதேஸ் ஆகிய இரு மாணவர்களும் தமக்கான துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர். விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின்…

மேலும் படிக்க

கல்லூரி ஸ்தாபகரின் இலங்கை விஜயம்

முப்பது ஆண்டுகளாக மகத்தான சேவையை வழங்கி வரும் சமூக நலன்புரி அமைப்பு , கடந்த 12 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை வலுவூட்டியதன் மூலம் சமூக பொருளாதார மாற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த பூங்கா ஆகியவற்றின் ஸ்தாபகராகிய திரு.கந்தப்பன் சற்குணேஸ்வரன் அவர்கள் இலங்கைக்கான தமது விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார். அந்தவகையில் இங்கு நடைபெற்ற செயற்பாடுகளைப் பார்வையிடும் வண்ணம் விவேகானந்த பூங்காவினைப் பார்வையிட்டதோடு மட்டுமன்றி விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரிக்கான வருகையை அடுத்து சுவாமி…

மேலும் படிக்க

கரம் கொடுப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் Calculator ஒன்றும் எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று 60 மாணவர்களுக்கு விசேட உணவு, பிரத்தியேக வகுப்புகள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என மாணவர்களுக்கான வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் நிதியுதவியுடன் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டதோடு…

மேலும் படிக்க

தொடரும் பயணங்களில்….துவங்கும் புத்தாண்டு !

குரோதி வருடம் இனிதே பிறந்து விரோதங்கள் இன்றி யாவர்க்கும் நன்மையளித்து வறுமை நீங்கி செம்மையுற்று அனைவரும் செழிப்புடன் வாழ தமிழ்ப்புத்தாண்டாம் சித்திரையை நாம் சிறப்பாக வரவேற்பது எம் தமிழ் மரபு. சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கிய எமது பயணத்தில் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழப் பிரார்த்திப்பது எமது வழக்காறாகும். அந்த வகையில் விவேகானந்த குடும்பத்தினரின் சித்திரைக் கொண்டாட்டமானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் சமூக நலன்புரியமைப்பின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி புதுக்குடியிருப்பு, கொம்மாதுறை நிலைய…

மேலும் படிக்க

பன்னிரு அகவை கடந்ததின்று!

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நெறி நின்று, அவரது கம்பீரமொத்த தோற்றம் கொண்டு, அவர் தம் உருவச்சிலையைத் தமது அடையாளமாகக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தரம் கண்டு புதுக்குடியிருப்பு நகர் தன்னில் சுவாமியின் நாமத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கும் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இன்று தனது 12 வது அகவை தினத்தை செவ்வனே கடக்கின்றது. எமது கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் வழியே எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் முகாமைத்துவத்தில் மிகவும் திறம்பட நடத்தாப்பட்டுக்…

மேலும் படிக்க

நன்கொடையாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையில் திருமதி.தாரணி ராம்ராஜ் அவர்களின் பிறந்த தினம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினரால் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன்…

மேலும் படிக்க

விவேகானந்த குடும்பத்தினரின் இன, மத பேதம் கடந்த பொங்கல் கொண்டாட்டம்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்துண்டு நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த குடும்பத்தினரால் இன, மத, பேதங்களின்றி அனைத்து மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் உழவர் திருநாள் இன்றைய தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும்…

மேலும் படிக்க