இயற்கையை பாதுகாப்பதே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அடிப்படை

இயந்திர மயமாக்கப்பட்ட இன்றைய உலகில் எதிர்கால சந்ததிக்கு மாசுக்களற்ற புதிய சூழலொன்றை வழங்குவதற்கு இன்றைய இயற்கையைக் காப்பதொன்றே வழிமுறையாகும். அதனை உணர்த்தும் வகையில் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் (World Environmental Day) ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, எமது Vivekananda College of Technology (VCOT) மற்றும் Amirda நிறுவனமும் இணைந்து “கழிவுப்பொருட்களின் மீள்பயன்பாடு (Waste Recycling)” என்ற செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது. இதற்கான காரணம், இலங்கையில் நாள் ஒன்றுக்கு திண்மக்கழிவாக…

மேலும் படிக்க
தன்னம்பிக்கையும் உழைப்புமே நாளைய முதலீடு

தன்னம்பிக்கையும் உழைப்புமே நாளைய முதலீடு

அபிவிருத்தியடைந்து வரும் எமது இலங்கை நாட்டின் இன்றைய காலகட்ட சூழ்நிலையானது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாதிப்புக்களையும் தாண்டிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. இதனால் மாதாந்த வருமானத்தைக் காட்டிலும் அதிகரித்த பொருட்களின் விலையிலே பல்வேறு குடும்பங்களின் சுமையான எதிர்காலம் தங்கியிருக்கின்றதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். பொருளாதார மையமான நாடாக காணப்பட்ட இலங்கையில் இன்று பொருத்தமான வேலை வாய்ப்பின்மை, அரசாங்க வேலை வாய்ப்புக்களை எதிர்ப்பார்த்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கி இன்றைய இளைஞர்…

மேலும் படிக்க
Environmental Activities

இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பு ..!

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.அந்த வகையில் பசுமைப் புரட்சித் திட்டம் எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்றிட்டங்களை எமது சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியினூடாக முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தின் 3ம் குறிச்சி கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணைப்பாளர் திருமதி.ரஜனி பாஸ்கரன் அவர்களின் தலைமையில்…

மேலும் படிக்க

கல்விக்கான மேலதிக வலுவூட்டல்….!

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில்,…

மேலும் படிக்க
Vocational Education

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக ஒரு செயற்பாடாக மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் ஒழுங்கமைப்பின் கீழ் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய 15 மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும் இணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. NVQ தொழிற்கல்வி முறைமையின் கீழ்…

மேலும் படிக்க
vcot

காரைதீவிலும் கணினி கற்கை கூடம் ஆரம்பம் …

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக நாம் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில், பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தி சமுதாயக் கல்லூரிகளை நாம் உருவாக்கி வருகின்றோம். அதனடிப்படையில் இவ்வாறான பிரதேசங்களில் கணினி கூடங்களை மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்படுத்தி வருகின்றது. அதன் பிரகாரம் முல்லைதீவு…

மேலும் படிக்க

கல்விக்குக் கரம் கொடுப்போம்

பின்தள்ளப்பட்ட கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்னும் தொனிப்பொருளில் வருடாந்தம் பல்வேறு செயற்றிட்டங்களை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கும் செயற்பாட்டினை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில், இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் கல்வி செயற்பாட்டில் தமது பங்களிப்பை…

மேலும் படிக்க

Bringing Smile with every stitch

The Vivekananda Community Foundation actively supports children’s homes and shelters through various impactful initiatives. These efforts include providing nutritious meals, distributing educational supplies, and gifting new clothing during festivals. With strong backing from diaspora communities, the Foundation ensures these programs bring hope to underprivileged children. We deeply appreciate our international supporters, who generously collaborate with…

மேலும் படிக்க

தன்னார்வ தொண்டர்களுடனான கலந்துரையாடல்

இன்றைய இளம் தலைமுறையினரிடையே சேவை மனப்பாங்கை கட்டியெழுப்புவது எமது கடமையாகும். அந்த வகையில் எம்முடன் இணைந்து பணியாற்றும் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்களுடனான வருடாந்த கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டலை அடுத்து எதிர்வரும் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றியும் அறக்கட்டளையுடனான அவர்களின் பயணம் தொடர்பிலும் தெளிவாகக் கலந்துரையாடப்பட்டது. எம்முடன் இணைந்து செயலாற்றும் எமது அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க

கல்வி ஏக்கங்களுடன் சிறுவர் காப்பகங்களில்..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களுக்கான பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் பிரகாரம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்டபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 13 சிறுமிகள் மற்றும் 10…

மேலும் படிக்க