இல்லங்களில் வாழும் சிறுமிகளின் உள்ளங்களிலும் ஒளியேற்ற

பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் மரபிற்கு ஏற்ப தமிழர் வழி வந்த பண்டிகையாம் தீபாவளிப் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறே அதிகாலையில் நீராடி புத்தாடை அணிந்து இல்லங்களில் விளக்கேற்றி ஒளி பெருக்கி தீபத்திருநாளை கொண்டாடுவது எமது வழக்கம். அந்த வகையில், அனைவர்க்கும் புத்தாடை எனும் கருப்பொருளில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், ஜீவானந்தா மகளிர் இல்லம், வாழும் கலை நம்பிக்கை நிதியம் ஆகிய எமது திட்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு தலா 5000 LKR வீதம்…

மேலும் படிக்க

எழுத்துக்கள் தாண்டிய சாதனைகளுக்கு

முறையான கல்வி என்பது நூலறிவு மாத்திரமின்றி விளையாட்டுக்கள் வெளிக்கள செயற்பாடுகள் என பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியது. அந்த வகையில், மாணவர்களின் கல்வியைத் தாண்டி அவர்களின் தேவைப்பாடுகளையும் கருத்திற்கொள்வது எமது கடமையாகும். அதன் பிரகாரம், தேசிய ரீதியாக பல்கலைக்கழகங்களிடையே நடைபெறும் வலைப்பந்து போட்டியில் பங்குபற்றும் மாணவ மாணவிகளுக்கான சீருடைகளுக்கான கோரிக்கைக்கமைவாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எமது கிழக்கு பல்கலைகக்கழக வலைப்பந்தாட்க் குழு மாணவர்களுக்கான சீருடைகள் எமது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் வழங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையிலே எமது கோரிக்கையினை…

மேலும் படிக்க

தடைகள் களைவோம்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக தேவைப்பாடுடைய மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்டு எம்மால் பொறுப்பெடுக்கப்பட்ட, உயர்தரம் பயிலும் 4 மாணவர்களின் கோரிக்கைக்கமைவாக அவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் கள சேவையாளர்களால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது இவ்வாறான செயற்பாடுகளுக்காக அனுசரணையை வழங்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர்…

மேலும் படிக்க

தடைகளை படிகளாக்குவோம் ..

வறுமைக் கோட்டிற்குக் கீழான பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில் எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையில் இடம்பெற்றதோடு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளரால் அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த செல்வி.மகேஸ்வரன்…

மேலும் படிக்க

வாழ்வியல் ! மாணவர்களுக்கானதோர் மேடை

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்ட, க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் சித்தியடையாத மாணவர்கள் வழிதவறிவிடாமல் அவர்களிற்கும் ஒரு வழி இருக்கின்றது என்பதனை உணர்த்தும் வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் விசேட பயிற்சியினை வடிவமைத்து வருடாந்தம் இதன் மூலம் 600 வழிதெரியாமல் திண்டாடும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டலை மேற்கொள்ளும் வகையிலான எமது திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இவ்வருட முதலாம் தொகுதி…

மேலும் படிக்க

மாணவர் ஒருவருக்கான பாதணி

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக அவருக்கான பாதணி எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வு கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய திரு.காந்தரூபன் அவர்களுக்கு எமது…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்கான மேலதிக வலுவூட்டலுக்காக ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை நடைமுறுப்படுத்தி வருகின்றது.அந்த வகையில் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில், கறுவாக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தின் உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களை மேற்பார்வை செய்யும் வண்ணம் எமது திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களின் பெறுபேறுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களுக்கான மேலதிக வகுப்புகள்…

மேலும் படிக்க

இரக்கப்படுவதை விட அவர்களை சிறக்கப் பண்ணுவோம்.

ஆரையம்பதியில் உடல், உள நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள், மாணவர்களை பராமரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த புகலிடம் நிலையத்தின் செயற்பாட்டிற்கு நிதியுதவி இல்லாமல் போனதையிட்டு எமது அறக்கட்டளையினை அவர்கள் நாடியபோது. அங்கு வரும் இறைவனின் குழந்தைகளான அவர்களிற்கு சத்துணவு பொதிகளை வழங்க எமது அறக்கட்டளை உறவுகள் முன்வந்தன. அதன் அடிப்படையில் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் நண்பர்கள், உறவுகள் இவர்களிற்கான கணினி பயிற்சி மற்றும் ஏனைய போக்குவரத்து செலவுகளுக்கான நன்கொடையினை கடந்த வருடம் வழங்கியிருந்தனர். அதனை தொடர்ந்து இவ்வருடம்…

மேலும் படிக்க

ஆசிரியர்களுக்கானதோர் மேடை..

சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர் பராமரிப்புத் திட்டத்தினூடாக புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான போசாக்கான உணவு மாணவர்களுக்கான சீருடை, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், எமது பாலர் பாடசாலை ஆசிரியர்களை தொழில் ரீதியாக மாத்திரமின்றி தனிமனிதனாகவும் வலுவூட்டும் வகையில் மற்றும் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்களில் மறைமுகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கணிணி மற்றும் ஆங்கிலப் பயிற்சி…

மேலும் படிக்க

மலையகம் நோக்கிய பயணம்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் அவர்கள் வழிதவறி செல்வதனை தடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கிய வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் பயிற்சி முறைமையினை ஒரு நாள் பயிற்சி பட்டறை மற்றும் 3 மாத பயிற்சி என எதிர்கால சந்ததியினை வலுப்படுத்தும் ஒரு போராட்டமாக வடகிழக்கு மற்றும் மலையகம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மலையக பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக பது/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ்…

மேலும் படிக்க