தன்னம்பிக்கையும் உழைப்புமே நாளைய முதலீடு

தன்னம்பிக்கையும் உழைப்புமே நாளைய முதலீடு

அபிவிருத்தியடைந்து வரும் எமது இலங்கை நாட்டின் இன்றைய காலகட்ட சூழ்நிலையானது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாதிப்புக்களையும் தாண்டிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. இதனால் மாதாந்த வருமானத்தைக் காட்டிலும் அதிகரித்த பொருட்களின் விலையிலே பல்வேறு குடும்பங்களின் சுமையான எதிர்காலம் தங்கியிருக்கின்றதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். பொருளாதார மையமான நாடாக காணப்பட்ட இலங்கையில் இன்று பொருத்தமான வேலை வாய்ப்பின்மை, அரசாங்க வேலை வாய்ப்புக்களை எதிர்ப்பார்த்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கி இன்றைய இளைஞர்…

மேலும் படிக்க
Amman Temple

கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் அதன் தாயக சேவைகளும்

இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயமானது கடந்த 30 வருடங்களாக ஆலய நிதியின் மூன்றில் இரண்டு பகுதியினை இலங்கையில் வடகிழக்கு மற்றும் மலையபகுதிகளில் காணப்படுகின்ற எமது மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற பல்வேறு மனிதாபிமான சேவைகளுக்கு வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை ஊடாகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் முல்லைதீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தினை ஆரம்பித்து வைத்து அதற்கான மாதாந்த உதவிகள் மற்றும் ஏனைய சமூகச் செயற்பாடுகள்,…

மேலும் படிக்க
og

நினைவு தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கான வெற்றிக்கிண்ணங்கள்

“கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், எமது நீண்டநாள் நன்கொடையாளராகிய திரு.கோபாலு பகீரதன் அவர்களின் தாயாராகிய திருமதி.அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் 4ம் ஆண்டு…

மேலும் படிக்க
Environmental Activities

இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பு ..!

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.அந்த வகையில் பசுமைப் புரட்சித் திட்டம் எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்றிட்டங்களை எமது சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியினூடாக முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தின் 3ம் குறிச்சி கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணைப்பாளர் திருமதி.ரஜனி பாஸ்கரன் அவர்களின் தலைமையில்…

மேலும் படிக்க
Career Guidance

தொழில் வழிகாட்டலுக்கான ஓர் பாதை

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பல்வேறு செயற்பாடுகளின் மூலம் மாற்றத்திற்கான வலவூட்டலினை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களை மையப்படுத்தியதாக அவர்களுக்கான வழிகாட்டலை வழங்கும் வண்ணம் விசேட கருத்தரங்கு ஒன்று UK இல் பிரபல்யமான கல்லூரிகளான Writtle College , IOM International Business School போன்றவற்றில்…

மேலும் படிக்க
Vocational Education

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக ஒரு செயற்பாடாக மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் ஒழுங்கமைப்பின் கீழ் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய 15 மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும் இணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. NVQ தொழிற்கல்வி முறைமையின் கீழ்…

மேலும் படிக்க
skill development

அவர்களின் எதிர்காலம் அவர்களிடமே….!

எமது அறக்கட்டளையினூடாக கனடாவைச் சேர்ந்த திரு.கோபால் பகீரதன் அவர்களின் அனுசரணையுடன் இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மாதர் அபிவிருத்தி சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் பயிலும் 20 பெண்களுக்கான விசேட தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி செயலமர்வானது மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பின் கீழ் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களும்…

மேலும் படிக்க
og

Empowering Future Leaders : Discussion with Advanced Level Students

The Vivekananda Community Foundation identifies and supports individuals in socially marginalized and economically disadvantaged situations, focusing on enhancing their education. In particular, the foundation ensures the continuity of their educational journey by providing a monthly motivational allowance to students from underprivileged economic backgrounds. As part of this initiative, a discussion session was successfully conducted with…

மேலும் படிக்க

Community Development in Mavilangathurai

மாவிலங்கத்துறையில் கல்வி மற்றும் மாணவர்களை மேம்படுத்துவதில் கூட்டிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளல்.
Celebrating excellence and fostering community development in Mavilangathurai with collaborative efforts in education and Student empowerment.

மேலும் படிக்க

உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நடைமுறைப்படுத்தலூடாகப் பாடசாலைகளின் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளை வருடாந்தம் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கல்லூரிகளை மையப்படுத்தியதாக களுதாவளை, பட்டிருப்பு, பழுகாமம், மண்டூர், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, அரசடித்தீவு, வந்தாறுமூலை, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் 1060 மாணவர்களுக்கான ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் தொழிநுட்பவியல் பாடங்களுக்கான கருத்தரங்குகள் செவ்வனே நடைபெற்றது. இவ்வாறான கருத்தரங்குகள்…

மேலும் படிக்க