மலையகம் நோக்கிய பயணம்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் அவர்கள் வழிதவறி செல்வதனை தடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கிய வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் பயிற்சி முறைமையினை ஒரு நாள் பயிற்சி பட்டறை மற்றும் 3 மாத பயிற்சி என எதிர்கால சந்ததியினை வலுப்படுத்தும் ஒரு போராட்டமாக வடகிழக்கு மற்றும் மலையகம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மலையக பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக பது/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ்…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்காக நாம்

நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப சிறந்த தலைவர்களை உருவாக்குதல் எனும் அடிப்படையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை தொடர் கட்டங்களாக மாதாந்தம் இருமுறை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் ஆடி மாதத்திற்கான இரண்டாவது செயலமர்வானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.ஸ்டான்லி பிரபாகரன் அவர்களின் ஆற்றுகையின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உட்பட எமது சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள முறையில் முரண்பாடுகள் எனும் கருப்பொருளில்…

மேலும் படிக்க

ஆற்றுப்படுத்துகை !ஓர் உளவியல் உந்துகோல்….

இன்றைய காலகட்டத்தின் இளம் சமுதாயத்தினருக்கு கல்வியைக் காட்டிலும் உளவியல் ஆரோக்கியம் மிகவும் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றது. அதற்கிணங்க மாணவர்களிடையே கற்றல் செயற்பாடுகள் மாத்திரமல்லாது வாழ்க்கைத் திறன் மற்றும் விழுமியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியினரின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கு ஆற்றுப்படுத்துகைக்கான வழிகாட்டல் காட்சிப்படுத்தல் பதாதை வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகளூடாக மாணவர்களுக்கான வழிகாட்டலை…

மேலும் படிக்க

நாளைய சமுதாயத்திற்காக நாம்

சிறந்த தலைவர்களை உருவாக்குவதன் மூலம் நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாதாந்தம் எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.ஸ்டான்லி பிரபாகரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் தலைமைத்துவ பயிற்சியானது நடாத்தியிருந்தார். பெண்கள் உரிமை சமந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு எமது நிறைவேற்று பணிப்பாளர்…

மேலும் படிக்க

கிராமங்கள் தோறும் கணினிப் பயிற்சி

மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேச மாணவர்களுக்கான அடிப்படைக்கணினி பயிற்சி செயலமர்வுகளை தொடர் கட்டங்களாக நடாத்தி வருகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கான செயலமர்வானது மாவிலங்கத்துறை பிரதேசத்தில் இடம்பெயற்றது. மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களால் இச்செயலமர்வானது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்காக எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் மனிதநேய…

மேலும் படிக்க

அனைவர்க்கும் அடிப்படைக் கணிணி !

சிறு வயது முதல் பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படைக் கணனி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதொன்றாகும். அந்த வகையில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மற்றும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கான கணிணி செயலமர்வுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் முன்னேற்றகரமான ஒரு மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வெருகலில் அமைந்துள்ள துவாரகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கணிணி வகுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.அதன் பிரகாரம்…

மேலும் படிக்க

மழைத்துளியாய் நாம்..

உலர் விதையின் மீது படும் சிறு மழைத்துளி கூட பெரு மரத்தைத் தோற்றுவிக்க வல்லது. அவ்வாறே வழி தவறும் சமுதாயத்தின் ஒவ்வொருவர் வாழ்விலும் வழிகாட்டியாய் நாம் ஏற்படுத்தும் மாற்றத்திற்கான வலுவூட்டல் எமது சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது. அதற்கிணங்க, பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகிய மற்றும் இலட்சியத்தை அடையாளம் காண முடியாத பின்தங்கிய கிராமப் பிரதேச இளைஞர் யுவதிகளின் மாற்றத்திற்கான வலுவூட்டலாக மாதந்தோறும் களங்களமைக்கும் செயற்பாட்டினை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதனடிப்படையில் ஆனி மாதத்திற்கான நிகழ்வு சேவா நிர்ணய ஏற்பாட்டில்…

மேலும் படிக்க

இன்றைய சாதனையாளர்கள்

வறுமை கல்விக்கு தடையாகிவிடக் கூடாது என்ற நோக்கிலும் மாணவர்களை கற்றலில் ஊக்கப்படுத்தவும் பாடசாலை அதிபர்களினூடாக வறுமைநிலையிலுள்ள அடையாளம் காணப்பட்ட மாணவர்களை எமது அறக்கட்டளையினூடாக புலம்பெயர் உறவுகள் பொறுப்பெடுத்து மாதாந்தம் அவர்களது கல்விக்கான ஊக்குவிப்புத்தொகையை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் இந்த மாணவர்களை பொறுப்பெடுத்தல் செயற்பாட்டின் மூலம் எமது உதவித்திட்டத்தில் பொறுப்பெடுக்கப்பட்டு கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகளைப் பெற்ற எமது மாணவர்களை நாம் பாராட்டுகின்றோம். அதன்படி 32 மாணவர்கள் கடந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் 25…

மேலும் படிக்க

சிலம்பம் ஓர் புதிய அத்தியாயம் !

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். தமிழர் வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். அந்தவகையில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிலம்பாட்ட போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவிகளில் 18 பேர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் 11வெள்ளிப்பதக்கம் 02, மண்ணிற பதக்கம் 07 உள்ளடங்கலாக 20 பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். கடுமையான சுற்றுப் போட்டிகளுக்கு மத்தியில் களமாடி அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டனர். இளைஞர்…

மேலும் படிக்க

ஆன்மீகமும் தலைமத்துவமும் !

தலைமைத்துவம் என்பது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். தலைமைத்துவ பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி சிறந்த தலைவர்களை வழிப்படுத்துவதன் மூலம் நாளைய சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும். அதன்படி விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாதாந்தம் எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியினைத் தொடர் கட்டங்களாக நடாத்தி வருகின்றது. வாழும் கலை நம்பிக்கை நிதியத்தின் சேவையாளராகிய சட்டத்தரணி. சத்ரி தயாமா ஜி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதோடு மிகவும் சிறப்பான முறையில் தலைமைத்துவப் பயிற்சியை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர்…

மேலும் படிக்க