மனதளவில் அனைவரும் மகத்தானவர்களே..
மனதளவில் வலுவிருக்கும் வரை உடல் குறைபாடு ஒரு பொருட்டல்ல. அவ்வாறே மாற்றுத்திறன் என்பது இயலாமையுமல்ல. யுத்ததால் பாதிக்கப்பட்டு உடல் பாகங்களை இழந்திருந்தாலும் கூட இன்றைய சமூகத்தில் தம்மால் இயன்றவரை வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மகத்தானவர்களே. அதற்கமைவாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது சமூக உள்வாங்கல் அமைப்பினால் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள நந்தகோபன் மண்டபத்தில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. சமூக உள்வாங்கல் அமைப்பினால் விவேகானந்த சமுதாய அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எம்மால் அவர்களுக்கான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது….