வித்தகராம் விவேகானந்தரின் நெறி நின்று..

ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனுக்காகவும் தமது ஆணித்தரமான வார்த்தைகள் மூலம், உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வை விழிப்புறச் செய்து எமது சமூகத்தில் ஆன்மீக ஞான ஒளி புகட்டி, மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தி, இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விவேகானந்தர். இன்று சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜனன தினமானது எமது விவேகானந்த தொழிநுட்பக் கல்லூரியில் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும்…

மேலும் படிக்க

அறக்கட்டளையின் பிரதேசமட்ட நகர்வு

இன்றைய சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் நாம் பல்வேறுபட்ட சமூக மட்டத்தினருடனும் இணைந்து செயற்படுகின்றோம். அதனடிப்படையில் பிரதேச செயலகங்களுடனான கலந்துரையாடல் என்பது எமது அறக்கட்டளையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இன்றியமையாததாகும். அதற்கிணங்க ஆரையம்பதி மற்றும் பட்டிப்பளைப் பிரதேச செயலகங்களில் இடமாற்றம் பெற்று வருகை தந்த புதிய பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் பிரிவிற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு அவர்களுடனான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும்…

மேலும் படிக்க

தலைமைத்துவம் ஒரு நிகழ்வல்ல!!

தலைமைத்துவம் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இன்றைய மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி அவர்களை நாளைய சமுதாயத்தின் சிறந்த தலைவர்களாக உருவாக்குவது எமது கடமைப்பாடாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது இன்றைய தினம் இடம்பெற்றது.எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப்பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பான முறையில் பல்வேறு செயற்பாடுகளூடாகத் தலைமைத்துவப்பண்புகளும், நேரமுகாமைத்துவம் போன்ற…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களின் தேவை ? அடிப்படை ஆங்கிலம் !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர்களை வலுவூட்டும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் கடந்த வருடம் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த வருடம் வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வகுப்புகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில அறிவினைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்திற்கிணங்க அதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. வித்யாலய அதிபர், மாணவர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர்…

மேலும் படிக்க

விழுதுகளை விதைப்போம் எம்மிடமிருந்தே ..

எமது சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எதிர்கால சமூகத்தை வலுவூட்டும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தலைமைத்துவப்பயிற்சியானது தொடர்ச்சியான ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இதற்கான அடித்தளத்தினை எம்மவரிடமிருந்தே ஆரம்பிக்கும் முகமாக 20 பேர் தெரிவு செய்யப்பட்டு தலைமைத்துவ பயிற்சியின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் இடம்பெற்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட எமது அறக்கட்டளையின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள், அமிர்தா…

மேலும் படிக்க

வீட்டிற்குள் கனமழையின் சுவடுகள் வெள்ளநிவாரணப் பொதியாய் எம் ஆறுதல்..

இயற்கையின் சீற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. ஆனாலும் அதன் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் வண்ணம் எம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது எமது கடமைப்பாடாகும். அந்த வகையில் தொடரும் கனமழை காரணமாக வெள்ளத்தினால் அவதியுறும் எம் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது கோறளைப்பற்றுப் பிரதேச செயலாளர் திரு.ராஜ்பாபு அவர்கள், இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்கள், விவேகானந்த…

மேலும் படிக்க

எமது மாணவர்களுக்கும் எம்மால் இயன்ற உதவி

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகள் மத்தியில் நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை முன்னெடுத்து வரும் அதே வேளை எமது தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களுடன் இன்றைய கிறிஸ்துமஸ் தினத்தினைக் கொண்டாடினோம். கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் கல்வி பயிலும் எமது மாணவர்கள் மற்றும் எமது சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலினூடாக எம்முடன் இணைந்து செயலாற்றும் எமது பாலர் பாடசாலை ஆசிரியர்களும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றதோடு அவர்களுக்கான உலர்…

மேலும் படிக்க

மனதளவில் அனைவரும் மகத்தானவர்களே..

மனதளவில் வலுவிருக்கும் வரை உடல் குறைபாடு ஒரு பொருட்டல்ல. அவ்வாறே மாற்றுத்திறன் என்பது இயலாமையுமல்ல. யுத்ததால் பாதிக்கப்பட்டு உடல் பாகங்களை இழந்திருந்தாலும் கூட இன்றைய சமூகத்தில் தம்மால் இயன்றவரை வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மகத்தானவர்களே. அதற்கமைவாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது சமூக உள்வாங்கல் அமைப்பினால் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள நந்தகோபன் மண்டபத்தில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. சமூக உள்வாங்கல் அமைப்பினால் விவேகானந்த சமுதாய அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எம்மால் அவர்களுக்கான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது….

மேலும் படிக்க

ஏழ்மை தீராதெனினும் எம்மால் இயன்ற உதவி..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் வாயிலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகளுடன் நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம் அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட செங்கலடி பிரதேசத்தில் உள்ள பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருடன் நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினோம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் இந்நிகழ்வில்…

மேலும் படிக்க

இறைவனைக் கண்டோம் இவர்களின் கண்களில்..

இயேசு பாலகனின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தார் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சிறுவர்களின் மனங்களைக் குளிர்விப்பதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களினூடாக நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் மயிலம்பாவளி பிரதேசத்தில் அமைந்துள்ள எமது வாழும்கலை நம்பிக்கை கிராம சிறுமிகள் இல்லத்துடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடும் முகமாக அவர்களுக்கான மதிய உணவு , இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள்…

மேலும் படிக்க