மாற்றத்திற்கான மாணவர் சமுதாயத்தின்ஓர் புதிய அத்தியாயம்

இன்றைய நவீன யுகத்தில் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாததொன்றாகும். சிறு வயது முதல் மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படை கணினி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதாகும். இதற்காக முன்னேற்றகரமான ஒரு தொழில்நுட்ப அறிவுடனான சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் அடிப்படை கணினி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். இதன் பிரகாரம் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல்முகத்துவரத்தில் அமைந்துள்ள துவாரகா பாடசாலைக்கு களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தோம். கணினிப்பயிற்சியின் அவசியம்,…

மேலும் படிக்க

ஒளியேற்றியோருக்கு நன்றிகள் கோடி..

விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து இருள் அகல ஒளி தேவை என்றும் தத்துவத்தை குறிப்பிட்டு ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த நாளினை தான் நாம் தீபாவளி என்று சொல்கிறோம். அந்த வகையில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுளை காண்தற்காக மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கிற்கமைய எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் சமுதாயத்தில் உள்ள தேவையுடையோரை இனம் கண்டு அவர்களுடன் இணைந்து இம்முறை நாம் தீபாவளியை கொண்டாடி அவர்கள் மனங்களை குளிரசெய்தோம். அந்த வகையில் தீபாவளிக்கான உதவியினை…

மேலும் படிக்க

களவிஜயமும் திட்ட மேற்பார்வையும்

மனித நேய நம்பிக்கை நிதியமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை அவர்களின் பிரதிநிதிகள் வருகைதந்தனர். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி சிரஞ்சீவி அவர்களுடன் அவரது கணவர் திரு.சிரஞ்சீவி வருகைதந்து அனைத்து செயற்பாடுகளையும் நேரடியாக மேற்பார்வை செய்தனர். எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடான கல்விக்கான செயற்பாடுகளாக வந்தாறுமூலை கண்ணகி வித்யாலயத்தில் தரம் 5 மாணவர்களிற்கான செயற்பாடுகள் மற்றும்…

மேலும் படிக்க

நலன்புரி பாலர் பாடசாலையில் வாணி விழா

வாணி விழா என்பது கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியிடம் சிறப்பான கல்வியை வேண்டி கொண்டாடப்படுகின்றது. இந் நிகழ்வு பாலர் பாடசாலைகளிலிருந்து கொண்டாடப்படுவது அவசியமாகும். அந்த வகையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வாணி விழா நிகழ்வானது இன்றைய தினம் திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டது. இதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து மாதாந்தம் உதவி வழங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் வசிக்கும்…

மேலும் படிக்க

சிறுவர்களே நாளைய தலைவர்கள்

முல்லைதீவு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களையும், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பயிலுனர்களையும் இணைத்து சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. சிறுவர்களே நாளைய தலைவர்கள் எனவே இவ்வாறான ஒன்றுசேர்ந்த நிகழ்வுகளே இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் தற்கால இயந்திரமய வாழ்க்கையில் இறுகிப்போன மனங்களிற்கு ஒரு ஆறுதலாகவும், ஒன்றுசேர்வதன் மூலமாக சமூக சிந்தனைகள் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சந்தோசமாக இன்றைய நாளை…

மேலும் படிக்க

சிறுவர் தின நிகழ்வும் பரிசில்கள் வழங்கலும்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட் / வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வானது வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் இடம்பெற்றது. இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக கடந்த 10 வருடங்களாக எமது செயற்பாடுகளிற்கான உதவி வழங்கிக்கொண்டிருக்கும் திரு.முருகேசு விசாகன் ( கனடா ) அவர்களின் அனுசரணையில் பரிசுப்பொதிகள் இச் சிறுவர்களிற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களால் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. இந் நிகழ்விற்கு…

மேலும் படிக்க

பாலர் பாடசாலை சிறார்களிற்கு பரிசு வழங்கல்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட் / பலாச்சோலை பாலர் பாடசாலை சிறார்களிற்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டது, இப்பாடசாலையினை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக கடந்த 5 வருடங்களிற்கு மேலான தொடர்பினூடாக திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் ( கனடா ) குடும்பத்தினர் இதற்கான அனுசரணையினை கடந்த 2 வருடங்களாக வழங்கிவருவதுடன் இப் பரிசுப்பொதிகளையும் இச்சிறார்களிற்கு வழங்கிவைத்தனர். மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலை மாணவர்களின் கற்றச் செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு என்பவற்றை கடந்த வருடம் தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு…

மேலும் படிக்க

சிறுவர் தினத்திற்கான பரிசுகள்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் உதவித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையின் சிறுவர்களைப் பார்வையிடல் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு அதற்கான பரிசுப் பொருட்களை வழங்குதல் தொடர்பான நிகழ்வு இன்று நடைபெற்றது. இப்பாடசாலைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் விசேட சத்துணவு வழங்கல் போன்ற செயற்பாடுகளிற்கு அமெரிக்காவில இருந்து திரு.நல்லதம்பி குடும்பத்தினர் உதவி வழங்கிக்கொண்டு வருகின்றனர். சிறுவர் தினத்தினை முன்னிட்டு பரிசுப்பொருட்களும் வழங்கி சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தொடர்ச்சியான திரு.நல்லதம்பி குடும்பத்தின் உதவி…

மேலும் படிக்க

கல்விக்கான உதவி திட்டத்தில் மேலும் 5 புதிய மாணவர்கள்..

எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாட்டின் முக்கிய செயற்பாடான வறுமை நிலையில் உள்ள கல்வி கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு மாணவர் ஒருவரை பொறுப்பெடுங்கள் என்னும் செயற்பாட்டிற்கு அமைவாக அவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்கு மாதாந்த உதவித்தொகையினை வழங்கி வறுமை காரணமாக கல்வியில் பின்தங்கிவிடாமலிருக்கும் எம்மாலான இந்த செயற்பாட்டிற்கு ஆணிவேராக கிட்டத்தட்ட 70 மாணவர்களை தனது உறவுகள், நண்பர்கள் உதவிமூலம் பெறுப்பெடுத்து கடந்த 5 வருடங்களிற்கு மேலாக எம்முடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் கனடாவில் உள்ள திரு.இ.ஏகாம்பரம்…

மேலும் படிக்க

உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்பு பற்றிய களவிஜயம்

எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக இணைந்து செயற்பாடுகின்ற மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி பங்களிப்பில் எமது கல்விசார் உதவி பணிகளில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்களை இலவசமாக நடாத்தும் திட்டத்தின் 2ம் கட்ட நிகழ்ச்சித் திட்டமானது மட்/ககு / கிரான் மத்திய கல்லூரியில் இவ் வருட மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறை படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்த செயற்பாடுகளை கண்காணிப்பு செய்யும் முகமாக பாடசாலைக்கு சென்று பிரதிஅதிபரை சந்தித்து…

மேலும் படிக்க