சிறுவர் தின நிகழ்வும் பரிசில்கள் வழங்கலும்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட் / வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வானது வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் இடம்பெற்றது. இப்பாடசாலையினை பொறுப்பெடுத்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக கடந்த 10 வருடங்களாக எமது செயற்பாடுகளிற்கான உதவி வழங்கிக்கொண்டிருக்கும் திரு.முருகேசு விசாகன் ( கனடா ) அவர்களின் அனுசரணையில் பரிசுப்பொதிகள் இச் சிறுவர்களிற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களால் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. இந் நிகழ்விற்கு…

மேலும் படிக்க

பாலர் பாடசாலை சிறார்களிற்கு பரிசு வழங்கல்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட் / பலாச்சோலை பாலர் பாடசாலை சிறார்களிற்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டது, இப்பாடசாலையினை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக கடந்த 5 வருடங்களிற்கு மேலான தொடர்பினூடாக திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் ( கனடா ) குடும்பத்தினர் இதற்கான அனுசரணையினை கடந்த 2 வருடங்களாக வழங்கிவருவதுடன் இப் பரிசுப்பொதிகளையும் இச்சிறார்களிற்கு வழங்கிவைத்தனர். மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலை மாணவர்களின் கற்றச் செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு என்பவற்றை கடந்த வருடம் தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு…

மேலும் படிக்க

சிறுவர் தினத்திற்கான பரிசுகள்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் உதவித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையின் சிறுவர்களைப் பார்வையிடல் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு அதற்கான பரிசுப் பொருட்களை வழங்குதல் தொடர்பான நிகழ்வு இன்று நடைபெற்றது. இப்பாடசாலைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் விசேட சத்துணவு வழங்கல் போன்ற செயற்பாடுகளிற்கு அமெரிக்காவில இருந்து திரு.நல்லதம்பி குடும்பத்தினர் உதவி வழங்கிக்கொண்டு வருகின்றனர். சிறுவர் தினத்தினை முன்னிட்டு பரிசுப்பொருட்களும் வழங்கி சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தொடர்ச்சியான திரு.நல்லதம்பி குடும்பத்தின் உதவி…

மேலும் படிக்க

கல்விக்கான உதவி திட்டத்தில் மேலும் 5 புதிய மாணவர்கள்..

எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாட்டின் முக்கிய செயற்பாடான வறுமை நிலையில் உள்ள கல்வி கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு மாணவர் ஒருவரை பொறுப்பெடுங்கள் என்னும் செயற்பாட்டிற்கு அமைவாக அவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்கு மாதாந்த உதவித்தொகையினை வழங்கி வறுமை காரணமாக கல்வியில் பின்தங்கிவிடாமலிருக்கும் எம்மாலான இந்த செயற்பாட்டிற்கு ஆணிவேராக கிட்டத்தட்ட 70 மாணவர்களை தனது உறவுகள், நண்பர்கள் உதவிமூலம் பெறுப்பெடுத்து கடந்த 5 வருடங்களிற்கு மேலாக எம்முடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் கனடாவில் உள்ள திரு.இ.ஏகாம்பரம்…

மேலும் படிக்க

உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்பு பற்றிய களவிஜயம்

எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக இணைந்து செயற்பாடுகின்ற மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி பங்களிப்பில் எமது கல்விசார் உதவி பணிகளில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்களை இலவசமாக நடாத்தும் திட்டத்தின் 2ம் கட்ட நிகழ்ச்சித் திட்டமானது மட்/ககு / கிரான் மத்திய கல்லூரியில் இவ் வருட மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறை படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்த செயற்பாடுகளை கண்காணிப்பு செய்யும் முகமாக பாடசாலைக்கு சென்று பிரதிஅதிபரை சந்தித்து…

மேலும் படிக்க

சிறுவர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ” சிறுவர்கள் அனைத்தையும் விட பெறுமதியானவர்கள் ” எனும் தலைப்பில் களுவன்கேணி பிரதேசத்தில் உள்ள 3 பாலர் பாடசாலையில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்விற்காக மாணவர்களிற்கான பரிசுப்பொருட்கள் மற்றும் குளிர்பான வசதிகளுக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அதற்கான நிதியினை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவரும்…

மேலும் படிக்க

வெற்றிகரமாக இந்தியாவில் பயிற்சி நிறைவு

பாடசாலைக்கல்வியின் பின்னரான வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் வாழ்கின்ற எமது இளம் சமூகத்தினை தட்டியெழுப்பி அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் சமூகப்பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தன்னலமின்றி ஈடுபடும் எமது சேவையாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு பயிற்சியினை United Board for Christian Higher Education in Asia அமைப்பின் நிதியுதவியுடன் ICRDCE நிலையத்தினால் 12 நாட்கள் இந்தியாவிற்கு அழைத்தது முதல் முற்று முழுவதும் இலவசமாக வழங்கியிருந்தனர். வாழ்வியல் மற்றும் சமுதாய கல்லூரி பற்றிய இந்த வதிவிட பயிற்சிப்…

மேலும் படிக்க

தரம் 5 மாணவர்களிற்கான நுண்ணறிவு

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்க்கு மாணவர்களை தாயர்படுத்தி சித்தியடைவினை அதிகரிப்பதற்காக நுண்ணறிவு பாடத்திற்கான விசேட வகுப்பு சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மூலமாக மட்/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்காக எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளிற்கு உதவி மேற்கொண்டு வரும் மனிதநேய நிதியம் நிதியுதவி வழங்கிக்கொண்டிருக்கின்றது. பயிற்சி வகுப்பு செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டதோடு மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாகவும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் 16.10.2023 மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகின்றார்கள். இங்கு…

மேலும் படிக்க

சிறுவர்களும் எதிர்கால கல்வியும்

உதவிகோரல் திட்டமுன்மொழிவு செயற்றிட்ட பிரிவு : சிறுவர்கள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் செயற்பாடு : பாலர் பாடசாலைகள் பொறுப்பெடுக்கப்பட்டு போசாக்குணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான உதவியும் நியாயப்படுத்தல் :இலங்கையில் வுறுமையான மாவட்டங்கள் வரிசையில் முல்லைதீவு, மட்டக்களப்பு காணப்படுகின்றது. இந்த வறுமைக்கும் கல்வி அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்தால் ஒரு மனிதனின் மூளையின் 95% வளர்ச்சி 5 வயதுக்குள் நடைபெறுவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வளர்ச்சி சிறப்பாக இருக்கு போசாக்கான உணவுகள் இந்த வயதுக்குள் போதுமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அறிவிலும் திறமையிலும் வலுப்பெற முடியும்.இந்த…

மேலும் படிக்க

விடேச இலவச வகுப்பு தரம் 5

உதவிகோரல் திட்டமுன்மொழிவு செயற்றிட்ட பிரிவு : மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாடு : தரம் 5 இல் கல்விகற்கும் மாணவர்களை புலமை பரிசில் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கான விசேட இலவச வகுப்புக்களை நடாத்துதல் நியாயப்படுத்தல் : இலங்கை அரசாங்கத்தால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் அரச தொழில் அற்ற வறுமைகேட்டின் கீழ் வாழும் குடும்ப மாணவர்களிற்கு மாதாந்தம் தலா 1800 LKR படி அவர்களின் பாடசாலை கல்விக் காலம் வரையும் வழங்குவதற்கான நடைமுறை உள்ளது.எனவே வறுமைநிலையில் உள்ள குடும்ப மாணவர்களுக்கான ஒரு…

மேலும் படிக்க