அறக்கட்டளையின் பிரதேசமட்ட நகர்வு

இன்றைய சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் நாம் பல்வேறுபட்ட சமூக மட்டத்தினருடனும் இணைந்து செயற்படுகின்றோம். அதனடிப்படையில் பிரதேச செயலகங்களுடனான கலந்துரையாடல் என்பது எமது அறக்கட்டளையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இன்றியமையாததாகும். அதற்கிணங்க ஆரையம்பதி மற்றும் பட்டிப்பளைப் பிரதேச செயலகங்களில் இடமாற்றம் பெற்று வருகை தந்த புதிய பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் பிரிவிற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு அவர்களுடனான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும்…

மேலும் படிக்க

தலைமைத்துவம் ஒரு நிகழ்வல்ல!!

தலைமைத்துவம் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இன்றைய மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி அவர்களை நாளைய சமுதாயத்தின் சிறந்த தலைவர்களாக உருவாக்குவது எமது கடமைப்பாடாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது இன்றைய தினம் இடம்பெற்றது.எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப்பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பான முறையில் பல்வேறு செயற்பாடுகளூடாகத் தலைமைத்துவப்பண்புகளும், நேரமுகாமைத்துவம் போன்ற…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களின் தேவை ? அடிப்படை ஆங்கிலம் !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர்களை வலுவூட்டும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் கடந்த வருடம் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த வருடம் வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வகுப்புகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில அறிவினைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்திற்கிணங்க அதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. வித்யாலய அதிபர், மாணவர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர்…

மேலும் படிக்க

பல தலைமுறைகள் தாண்டியதோர் நிலைத்திருப்பு, உங்கள் பெயரால் ஓர் மரம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனிமனித வலுவூட்டலினூடாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.அவ்வாறே இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக பூமியைக் குளிர்விப்பதற்காக பசுமைப்புரட்சி எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக குறைந்தது 500 மரக்கன்றுகளையாவது நடுதல் அல்லது வழங்குதல் மூலம் இந்த ஆண்டிற்கான செயற்பாடாக முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டத்திற்கிணங்க அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் எமது புதிய திட்டமானது அமுல்படுத்தப்பட்டது….

மேலும் படிக்க

விழுதுகளை விதைப்போம் எம்மிடமிருந்தே ..

எமது சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எதிர்கால சமூகத்தை வலுவூட்டும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தலைமைத்துவப்பயிற்சியானது தொடர்ச்சியான ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இதற்கான அடித்தளத்தினை எம்மவரிடமிருந்தே ஆரம்பிக்கும் முகமாக 20 பேர் தெரிவு செய்யப்பட்டு தலைமைத்துவ பயிற்சியின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் இடம்பெற்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட எமது அறக்கட்டளையின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள், அமிர்தா…

மேலும் படிக்க