வாழ்வியல் ! மாணவர்களுக்கானதோர் மேடை

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்ட, க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் சித்தியடையாத மாணவர்கள் வழிதவறிவிடாமல் அவர்களிற்கும் ஒரு வழி இருக்கின்றது என்பதனை உணர்த்தும் வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் விசேட பயிற்சியினை வடிவமைத்து வருடாந்தம் இதன் மூலம் 600 வழிதெரியாமல் திண்டாடும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டலை மேற்கொள்ளும் வகையிலான எமது திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இவ்வருட முதலாம் தொகுதி…

மேலும் படிக்க

மாணவர் ஒருவருக்கான பாதணி

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக அவருக்கான பாதணி எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வு கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய திரு.காந்தரூபன் அவர்களுக்கு எமது…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்கான மேலதிக வலுவூட்டலுக்காக ..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினானது மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பல பயனுள்ள செயற்பாடுகளை நடைமுறுப்படுத்தி வருகின்றது.அந்த வகையில் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில், கறுவாக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தின் உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களை மேற்பார்வை செய்யும் வண்ணம் எமது திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களின் பெறுபேறுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களுக்கான மேலதிக வகுப்புகள்…

மேலும் படிக்க

முழுவதுமாகத் தீர்க்க முடியாதெனினும்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகக் காணப்படும் ஆலங்குளம் கிராமம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட சிரமத்தை எதிர்நோக்கும் அதிகஷ்டப் பிரதேசமாகும். இக்கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரியதொரு பிரச்சினையாகும். அந்தவகையில், ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் முதன் முதலாக பரிசளிப்பு விழாவினை நடாத்தவிருக்கும் அதேவேளை அந்நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் போத்தலை பரிசாகக் கொடுப்பதற்காக எமது அறக்கட்டளையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வேண்டுகோளுக்கிணங்க எமது அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஆரம்பப்பிரிவு…

மேலும் படிக்க

மாற்றம் கிராமத்தில் இருந்து…

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க”கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் அடிப்படைத் தேவையாக உள்ள கல்வி, கலாச்சார, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது…

மேலும் படிக்க

எமது கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறை நிர்மாணம்

மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது அடிப்படைக்கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவை மையப்படுத்தியதாகப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் ஒரு செயற்பாடாக ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று உருவாக்கப்பட்டதோடு எமது கல்லூரியின் ஸ்தாபகர்.திரு.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எமது விவேகானந்த குடும்பத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், எமது அறக்கட்டளையின் திட்ட…

மேலும் படிக்க

விவேகானந்த பூங்கா திறப்பு விழா

சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க “உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன ; நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” அந்த வகையில் சமூக நலன்புரி அமைப்பு, திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் எண்ணங்களின் வலிமையின் வழியே உருவாகிய எமது விவேகானந்த பூங்காவின் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத்…

மேலும் படிக்க

வலுவூட்டலுக்கான ஒரு அடித்தளம் ..

எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன் றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தைச் சேர்ந்த செல்வன். சுசித்திரன் சுகிர்தன் மற்றும் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.தினேஸ்குமார் லிதேஸ் ஆகிய இரு மாணவர்களும் தமக்கான துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர். விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின்…

மேலும் படிக்க

இரக்கப்படுவதை விட அவர்களை சிறக்கப் பண்ணுவோம்.

ஆரையம்பதியில் உடல், உள நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள், மாணவர்களை பராமரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த புகலிடம் நிலையத்தின் செயற்பாட்டிற்கு நிதியுதவி இல்லாமல் போனதையிட்டு எமது அறக்கட்டளையினை அவர்கள் நாடியபோது. அங்கு வரும் இறைவனின் குழந்தைகளான அவர்களிற்கு சத்துணவு பொதிகளை வழங்க எமது அறக்கட்டளை உறவுகள் முன்வந்தன. அதன் அடிப்படையில் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் நண்பர்கள், உறவுகள் இவர்களிற்கான கணினி பயிற்சி மற்றும் ஏனைய போக்குவரத்து செலவுகளுக்கான நன்கொடையினை கடந்த வருடம் வழங்கியிருந்தனர். அதனை தொடர்ந்து இவ்வருடம்…

மேலும் படிக்க

ஸ்தாபகரின் சேவையாளர்களுடனான கலந்துரையாடல்

ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் விவேகனந்த தொழில் நுட்பவியல் கல்லூரி விஜயத்தினைத் தொடர்ந்து விவேகானந்த குடும்பத்தினருடான சந்திப்பினை மேற்க்கொண்டிருந்தார். இக் கலந்துரையாடலானது அமிர்தா நிறுவனத்தில் இடம்பெற்றது. இதன்போது சேவையளர்களின் அறிமுகமும் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலானது நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையின் கீழ் நிதிப் பணிப்பாளர் திரு.எஸ்.புருசோத்மன், மற்றும் முகாமைத்துவ உறுப்பினர்கள், ஏனைய சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். முதலாவதாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மூன்று நிலையங்களினதும் தொழில்பயிற்சி செயற்பாடுகள் பற்றிய விளக்கமானது திரு.த.சந்திரசேகரம் அவர்களின் வழிநடத்தலின்…

மேலும் படிக்க