ஆற்றுப்படுத்துகை !ஓர் உளவியல் உந்துகோல்….

இன்றைய காலகட்டத்தின் இளம் சமுதாயத்தினருக்கு கல்வியைக் காட்டிலும் உளவியல் ஆரோக்கியம் மிகவும் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றது. அதற்கிணங்க மாணவர்களிடையே கற்றல் செயற்பாடுகள் மாத்திரமல்லாது வாழ்க்கைத் திறன் மற்றும் விழுமியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியினரின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கு ஆற்றுப்படுத்துகைக்கான வழிகாட்டல் காட்சிப்படுத்தல் பதாதை வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகளூடாக மாணவர்களுக்கான வழிகாட்டலை…

மேலும் படிக்க

பசுமை உலகிற்கு வித்திடுவோம்..

இன்றைய காலகட்டத்தில் சூழல் மாசடைதல், புவி வெப்பமாதல் போன்ற விளைவுகளால் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும். அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்திற்கான கலந்துரையாடல் மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர், சூழல் பாதுகாப்புக் கழக பொறுப்பாசிரியர், பிரதேச செயலகத்தின் சூழல் பாதுகாப்பு இணைப்பாளர், எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட 25 சூழல் பாதுகாப்பு குழு…

மேலும் படிக்க

ஆலங்குளம் கிராமத்தின் பாடசாலைக்கான களதரிசனம்

பாடசாலையால் எமது அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக 53.7 Km தூரம் பயணம்செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலே எல்லை கிராமமாக காணப்படும் ஆலங்குளம் அ.த.க பாடசாலைக்கு சென்று எமது குழுவால் மேற்கொள்ளப்பட்ட களத்தரிசனத்தில் இந்த கிராமத்தில் 320 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அரச உத்தியோகமோ, தனியார் துறையிலோ தொழில் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை. காரணம் தரம் 9 வரையும் கல்விகற்கும் வசதியுடனான பாடசாலையே உள்ளது. சுற்றிவர இருக்கும் 2 கிராமங்களிலும் பாடசாலை இல்லாததால் அந்த கிராமங்களிற்கும் பொதுவான…

மேலும் படிக்க

கரம் கொடுப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை மற்றும் மாணவர்களுக்குரிய தேவையின் நிமித்தம் அவர்களுக்கான உதவிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எமது திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த கால வினாத்தாள் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் Calculator ஒன்றும் எமது திட்டமுகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க

புகலிடம் !

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சத்துணவுப்பொதிகள் வழங்குதல் , விசேட தினங்களுக்கான பொதிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடுஅடிப்படைக் கணினிப்பயிற்சி , பனையோலைப் பயிற்சி என இம்மாணவர்களுக்கான பயிற்சிநெறிகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதனடிப்படையில் புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அடிப்படைப் பனையோலைப் பயிற்சி நெறியானது அங்குள்ள சுயதொழில் முயற்சியாளரான திரு.குகன் என்பவரால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை இதனை ஒரு தொடர் செயற்பாடாக முன்னெடுக்க…

மேலும் படிக்க

நாளைய சமுதாயத்திற்காக நாம்

சிறந்த தலைவர்களை உருவாக்குவதன் மூலம் நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாதாந்தம் எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.ஸ்டான்லி பிரபாகரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் தலைமைத்துவ பயிற்சியானது நடாத்தியிருந்தார். பெண்கள் உரிமை சமந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு எமது நிறைவேற்று பணிப்பாளர்…

மேலும் படிக்க

கிராமங்கள் தோறும் கணினிப் பயிற்சி

மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேச மாணவர்களுக்கான அடிப்படைக்கணினி பயிற்சி செயலமர்வுகளை தொடர் கட்டங்களாக நடாத்தி வருகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கான செயலமர்வானது மாவிலங்கத்துறை பிரதேசத்தில் இடம்பெயற்றது. மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களால் இச்செயலமர்வானது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்காக எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் மனிதநேய…

மேலும் படிக்க

அனைவர்க்கும் அடிப்படைக் கணிணி !

சிறு வயது முதல் பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படைக் கணனி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதொன்றாகும். அந்த வகையில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மற்றும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கான கணிணி செயலமர்வுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் முன்னேற்றகரமான ஒரு மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வெருகலில் அமைந்துள்ள துவாரகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கணிணி வகுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.அதன் பிரகாரம்…

மேலும் படிக்க

அன்னை ஸ்ரீ சாரதா நிலையம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறே எமது சாரதா நிலையத்தின் மாணவிகள் கராத்தே, யோகா, சிரட்டைக் கைத்தொழில், ஆரிவேர்க் போன்ற பல்வேறு பயிற்சிகளிலும் சிறந்து…

மேலும் படிக்க

மழைத்துளியாய் நாம்..

உலர் விதையின் மீது படும் சிறு மழைத்துளி கூட பெரு மரத்தைத் தோற்றுவிக்க வல்லது. அவ்வாறே வழி தவறும் சமுதாயத்தின் ஒவ்வொருவர் வாழ்விலும் வழிகாட்டியாய் நாம் ஏற்படுத்தும் மாற்றத்திற்கான வலுவூட்டல் எமது சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது. அதற்கிணங்க, பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகிய மற்றும் இலட்சியத்தை அடையாளம் காண முடியாத பின்தங்கிய கிராமப் பிரதேச இளைஞர் யுவதிகளின் மாற்றத்திற்கான வலுவூட்டலாக மாதந்தோறும் களங்களமைக்கும் செயற்பாட்டினை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதனடிப்படையில் ஆனி மாதத்திற்கான நிகழ்வு சேவா நிர்ணய ஏற்பாட்டில்…

மேலும் படிக்க