இன்றைய சாதனையாளர்கள்

வறுமை கல்விக்கு தடையாகிவிடக் கூடாது என்ற நோக்கிலும் மாணவர்களை கற்றலில் ஊக்கப்படுத்தவும் பாடசாலை அதிபர்களினூடாக வறுமைநிலையிலுள்ள அடையாளம் காணப்பட்ட மாணவர்களை எமது அறக்கட்டளையினூடாக புலம்பெயர் உறவுகள் பொறுப்பெடுத்து மாதாந்தம் அவர்களது கல்விக்கான ஊக்குவிப்புத்தொகையை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் இந்த மாணவர்களை பொறுப்பெடுத்தல் செயற்பாட்டின் மூலம் எமது உதவித்திட்டத்தில் பொறுப்பெடுக்கப்பட்டு கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த முடிவுகளைப் பெற்ற எமது மாணவர்களை நாம் பாராட்டுகின்றோம். அதன்படி 32 மாணவர்கள் கடந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் 25…

மேலும் படிக்க

சிலம்பம் ஓர் புதிய அத்தியாயம் !

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். தமிழர் வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். அந்தவகையில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச சிலம்பாட்ட போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவிகளில் 18 பேர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் 11வெள்ளிப்பதக்கம் 02, மண்ணிற பதக்கம் 07 உள்ளடங்கலாக 20 பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். கடுமையான சுற்றுப் போட்டிகளுக்கு மத்தியில் களமாடி அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டனர். இளைஞர்…

மேலும் படிக்க

ஆன்மீகமும் தலைமத்துவமும் !

தலைமைத்துவம் என்பது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். தலைமைத்துவ பண்புகளை பொருத்தமான முறையில் அடையாளப்படுத்தி சிறந்த தலைவர்களை வழிப்படுத்துவதன் மூலம் நாளைய சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும். அதன்படி விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாதாந்தம் எமது சேவையாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியினைத் தொடர் கட்டங்களாக நடாத்தி வருகின்றது. வாழும் கலை நம்பிக்கை நிதியத்தின் சேவையாளராகிய சட்டத்தரணி. சத்ரி தயாமா ஜி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதோடு மிகவும் சிறப்பான முறையில் தலைமைத்துவப் பயிற்சியை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர்…

மேலும் படிக்க

வாழ்க்கைத்திறன் ஓர் தேடல் !!

இளைஞர், யுவதிகள் மாத்திரமின்றி மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான வாழ்வியல் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மாற்றத்திற்கான வலுவூட்டலினை திறன்பட மேற்கொண்டு முறையான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும். அந்த வகையில் கிராமங்கள் தோறும் களங்களமைத்து விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் வாழ்வியல் தொடர்பான அறிவினை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் தொழிற்பாதைக்கான வழிகாட்டலாகவும் அமைகின்றது. அதற்கிணங்க UK இல் பிரபல்யமான கல்லூரிகளான…

மேலும் படிக்க

மாதிரிப் பாடசாலையினரின் சித்திரை விழா

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் மாணவர்களுக்குரிய போசாக்கான உணவு போன்றவற்றை வழங்குவதன் மூலம் சிறுவர்களுக்கான பராமரிப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள எமது மாதிரிப் பாலர் பாடசாலையான நலன்புரி பாடசாலையில் சித்திரை தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுடன் எமது அறக்கட்டளையின் சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நலன்புரி…

மேலும் படிக்க

அகவை காணும் எம் அகல் !!

” துடிப்புமிக்க இளைஞர்களை எனக்கு தாருங்கள். இந்த பிரபஞ்சத்தையே மாற்றிக் காட்டுகின்றேன் ” என்றார் சுவாமி விவேகானந்தர். அதற்கிணங்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வலுவூட்டி எமது சமூகத்தை மாற்றியமைக்கும் தமது கனவை, இன்று நனவாக்கிக் கொண்டிருக்கும் சமூக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் பிறந்த தினமானது மிகவும் சிறப்பான முறையில் எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. சமூக நலன்புரி அமைப்பு, விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்கள்…

மேலும் படிக்க

மாணவர்களுக்கான கருத்தரங்குகள் !

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பிரத்தியேகமான கருத்தரங்குகளை நடாத்துவதன் மூலம் பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் கருத்தரங்குகள் அவர்களுக்கான ஊக்குவிப்பாகவும் அமையும். அந்த வகையில் களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 120 மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாட கருத்தரங்குகளும் அம்பிளாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள கலைமகள் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயிலும் 40 மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான கருத்தரங்கும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக உதவி புரிந்த…

மேலும் படிக்க

அறநெறி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் !

தற்போதைய மாணவர் சமுதாயத்திற்கு பாடசாலைக் கல்வியை மட்டுமல்லாது ஒழுக்கம் மற்றும் விழுமியப் பண்புகளையும் போதிப்பதன் மூலம் முறையான பிரஜைகளை உருவாக்க முடியும். அதன் பிரகாரம் அறநெறிப் பாடசாலைகள் அவ்வாறான ஒழுக்க விழுமியப் பண்புகளைப் போதித்து வருகின்றன. அதற்கிணங்க அப்பாடசாலைகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் ஆரையம்பதியில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள அறநெறி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்பாடானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. 80…

மேலும் படிக்க

களம் அமைப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையை வழங்கும் வண்ணம் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது. அந்த வகையில் எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட சுயதொழில் முயற்சியாளரான திருமதி.தங்கமலர் கணேசராஜா அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாடானது வாழ்வாதார ஊக்குவிப்பாக மட்டுமன்றி அவரது குடும்பத்தினர் மற்றும் மூன்று பிள்ளைகளுக்குமான கல்வி…

மேலும் படிக்க

அமைப்புகள் பலவாறாயினும் நோக்கம் ஒன்றே !

அமைப்புகள் பலவாறு இருப்பினும் தனிமனித வலுவூட்டலினூடான சமூக மாற்றமே எமது நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்குமான காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர்.திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு இக்காலப்பகுதியில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எமது எதிர்காலத்…

மேலும் படிக்க