பெற்றோருடனான கலந்துரையாடல்

மனித நேயநம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் நடைபெறுகின்ற Office management & IT மாணவர்களுக்கான பெற்றோருடனான கலந்துரையாடல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் திரு.ராஜு கபீரியல் அவர்களினால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியின் நோக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் இப் பயிற்சியின் நிதி வழங்குனர்கள் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டதோடு க.பொ.த உயர்தரத்தின் பின்னர் தமது வாழ்க்கையினை திட்டமிட்டு ஒரு சிறந்த எதிர்காலத்தினை…

மேலும் படிக்க

கல்வி மற்றும் திறன் விருதிக்காக

எமது அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடன் எமது அறக்கட்டளை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பில் 2 நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது. மாணவர்களின் வலுவூட்டலுக்காக அன்னை ஶ்ரீ சாரதா நிலையமும், இளைஞர்களின் வலுவூட்டலுக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியும் செயற்படுகின்றது. அவற்றின் காலாண்டு செயற்பாடுகளை கண்காணிக்கவும், அவற்றினை மேம்படுத்தவும் எமது சமூகப்பணியாளர்களினால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. அன்னை சாரதா நிலையத்தில் தரம் 8 இல் இருந்து தரம் 13 வரை 60 மாணவிகள் உள்ளனர். அவர்களில் தற்போது 10 பேர் க.பொ.த சாதாரண…

மேலும் படிக்க

களத்தில் நாம் செயற்றிட்டம் 2024..

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம். அந்த வகையில் பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று அங்கு தொழில்நுட்பக்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் பாடத்தேர்வுகளுக்கும் எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும் என்பதே எமது நோக்கமாகும். அதற்கிணங்க உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி…

மேலும் படிக்க

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று 60 மாணவர்களுக்கு விசேட உணவு, பிரத்தியேக வகுப்புகள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என மாணவர்களுக்கான வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் நிதியுதவியுடன் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டதோடு…

மேலும் படிக்க

விழுதுகளில் ஒரு நினைவாக ..

ஆலம் விதையென வேரூன்றி இன்று ஆயிரம் விழுதுகளைத் தன்னகத்தே கொண்ட விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை செவ்வனே கடக்கின்றது. அதேவேளை விழுதுகளில் ஒரு நினைவாக எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன்றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக பாடசாலை மற்றும் மேலதிக கல்விசார் நடவடிக்கைகளிற்கு அதிக தூரம் செல்லவேண்டியுள்ள வறுமை நிலையில் உள்ள மாணவர்களிற்கு அவர்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு துவிச்சரக்கர வண்டிகள் வழங்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளும் முகமாக முதற்கட்டமாக மாணவி…

மேலும் படிக்க

விழுதுகள் !

” நீ செய்த தவறுகளை வாழ்த்து; அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டுகின்றது.” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்கிணங்க வலிகளும் ஆயிரம் தடைகளும் கடந்து அனுபவங்கள் மூலம் பாடங்கள் பலகற்று, படிப்படியாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனமானது 2019.04.17 ஆம் திகதி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை இனிதே கடக்கின்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது திட்ட முகாமையாளர் திரு.சு.ராஜு கபீரியல் அவர்களின்…

மேலும் படிக்க

கிராமங்களை நோக்கிய பயணங்கள்…

பாடசாலைக் கல்வியின் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் பின்தங்கிய கிராமங்களில் தேக்கமடையும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் தூரநோக்குடன் அவர்களின் வாழ்க்கையினை திட்டமிடவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படும் சில குறிப்பிட்ட திறன்களை அடையாளப்படுத்தி அவற்றினை நிபர்த்தி செய்திடும் ஒரு செயற்பாடாகும். AU Lanka & Child Fund நிதி அனுசரணையில் எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமூதாய அறக்கட்டளையும் இணைந்து வவுணதீவு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம…

மேலும் படிக்க

கல்வி மற்றும் தகவல் வறுமை…

வறுமை என்பது உணவினால் என்பதனை விட, எமது மாவட்டத்தில் கல்வி மற்றும் தகவல் வறுமையுமே அதிகம் காணப்படுகின்றது. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பற்றி தெரியவில்லை,பல்கலைக்கழகங்கள் பற்றிய தெளிவில்லை, மட்டக்களப்பில் திறந்த பல்கலைகக்கழம் இருப்பது தெரியவில்லை, அரசினால் உயர் கற்றலுக்கு மாணவர்களிற்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரியவில்லை, க.பொ.த உயர்தரத்திற்கு பின்னரான அவர்களின் வாழ்க்கை திட்டமிடல் பற்றி தெரியவில்லை.. ஆனால் பல்கலைகழகம் கட்டாயம் செல்வேன் என்று மட்டும் கூறுகின்றனர். உயர்தரத்தில் 3 பாடங்களில்…

மேலும் படிக்க

தொடரும் பயணங்களில்….துவங்கும் புத்தாண்டு !

குரோதி வருடம் இனிதே பிறந்து விரோதங்கள் இன்றி யாவர்க்கும் நன்மையளித்து வறுமை நீங்கி செம்மையுற்று அனைவரும் செழிப்புடன் வாழ தமிழ்ப்புத்தாண்டாம் சித்திரையை நாம் சிறப்பாக வரவேற்பது எம் தமிழ் மரபு. சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கிய எமது பயணத்தில் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழப் பிரார்த்திப்பது எமது வழக்காறாகும். அந்த வகையில் விவேகானந்த குடும்பத்தினரின் சித்திரைக் கொண்டாட்டமானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் சமூக நலன்புரியமைப்பின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி புதுக்குடியிருப்பு, கொம்மாதுறை நிலைய…

மேலும் படிக்க

புத்தாண்டை முன்னிட்டு

புதிய தொடக்கத்தை குறிப்பிடும் புத்தாண்டு தினமானது அறிவு மற்றும் அன்பைக் கொண்டு வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றுகூடி புத்தாடை அணிந்து கோயில் சென்று வழிபாடு செய்வதுடன் ஆரம்பிக்கின்றது. அதற்கிணங்க எமது திட்டங்களினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும், இல்லங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் புத்தாண்டை வரவேற்க அவர்களுக்கான புத்தாடைகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பது எமது கடமையாகும். அந்த வகையில் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லம், மயிலம்பாவளி வாழும் கலை நம்பிக்கைக் கிராமம் மற்றும் முல்லைத்தீவு…

மேலும் படிக்க