நாளைய தலைமுறையினருக்காக நாம் ..

இன்றைய சிறுவர்களைப் பொருத்தமான முறையில் ஆற்றுகைப்படுத்துவதன் மூலம் நாளைய தலைவர்களை சிறப்பான முறையில் உருவாக்க முடியும் எனும் நோக்கில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எமது சமுதாயத்தின் இளைஞர்கள், பெண்கள், பின் தங்கிய கிராமப் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமங்களுக்கு சென்று மற்றும் எமது திட்ட பிரதேசங்களுக்கு சென்று வாழ்வியல் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவிகளுக்கான வாழ்வியல் பயிற்சியானது இன்றைய…

மேலும் படிக்க

பன்னிரு அகவை கடந்ததின்று!

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நெறி நின்று, அவரது கம்பீரமொத்த தோற்றம் கொண்டு, அவர் தம் உருவச்சிலையைத் தமது அடையாளமாகக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தரம் கண்டு புதுக்குடியிருப்பு நகர் தன்னில் சுவாமியின் நாமத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கும் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இன்று தனது 12 வது அகவை தினத்தை செவ்வனே கடக்கின்றது. எமது கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் வழியே எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் முகாமைத்துவத்தில் மிகவும் திறம்பட நடத்தாப்பட்டுக்…

மேலும் படிக்க

பிரதேச செயலகத்தினருக்கு வாழ்வியல் பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தான் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் தாண்டி அவற்றை மன தைரியத்துடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான மென் திறன் பயிற்சியே வாழ்வியலாகும். அந்த வகையில் இன்றைய தினம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கிராமங்களில் இளைஞர்கள், மாணவர்களுக்காக பணிபுரியும் சேவையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத் திறன் பயிற்சி பெற்ற அணியினரால் சிறப்பான முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது. குழுவாக வேலை செய்தல் பிரச்சினைகளை தீர்த்தல்…

மேலும் படிக்க

அனைவர்க்கும் புத்தாடை !

இளவேனில் தொடங்கும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்ட வாழ்வுமுறை தமிழருக்கு உரியது. அதன் பிரகாரம் தமிழர் தம் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மருத்துநீர் வைத்து புத்தாடை அணிந்து ஆலயம் சென்று பெரியவர்களிடம் கைவிசேடம் பெறுவது மரபாகும். அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது மாணவர்களுக்கான புத்தாடைகளை சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் வழங்கிவருகின்றது. அவ்வாறே பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டிற்காக மட்டக்களப்பு, மற்றும் முல்லைத்தீவில் அமைந்துள்ள சிறுமிகள் பராமரிப்பு…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்காய், நாம் !

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பின் தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த உதவித்தொகையொன்றினை வழங்குவதன் மூலம் அவர்களது கல்விக்கான எமது பங்களிப்பை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் திரு.சுப்பிரமணியம் ராஜு கபீரியல் அவர்கள்…

மேலும் படிக்க

வாழ்வியலும் வழிகாட்டலும்

அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காகக் கையாளப்படும் வாழ்வோடு இணைந்த முறையே வாழ்க்கை திறனாகும். முறையானதோர் இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் வாழ்க்கைத்திறன் பாரியளவிலான தாக்கம் செலுத்துவது இன்றியமையாததொன்றாகும் அந்த வகையில் முல்லைத்தீவு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வாழ்வியலும் வழிகாட்டலும் எமது பயிற்சி உத்தியோகத்தர் திரு.ஜெயம் ஜெகன் அவர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதோடு பிரச்சினைகளைத் தீர்த்தல் தொடர்பான வழிகாட்டல் பயிற்சி செயற்பாடுகளூடாக மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இவ்வாறான வாழ்வியல் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக…

மேலும் படிக்க

சவால்களை தாண்டி..

பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இவ்வாண்டிற்குரிய இரண்டாவது கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. எமது 5 பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் 7 ஆசிரியர்களும் கலந்துகொண்டதோடு, சென்ற கலந்துரையாடலுக்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதிகளில் அவர்களுடனான எமது செயற்றிட்டங்கள் பற்றி தெளிவூட்டப்பட்டது. அத்தோடு அவர்களின் வேண்டுகோளாக அவர்களிற்கு ஆங்கிலம் மற்றும் கணினி அத்தோடு மூன்றாம் மொழி சிங்களம் போன்றவற்றில் தங்களுக்கான அடிப்படை அறிவினை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டனர். அத்தோடு அவர்கள் பாடசாலையில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய பல விடயங்களை…

மேலும் படிக்க

மாதவம் !

தொட்டிலில் சேயாகி, தொலைவுகளை மாணவியாய் விழி துடைக்கும் தோழியாய், விரல் கோர்க்கும் காதலியாய், வழித்துணை காண் தாரமாய் – அவள் வாழ்வளிக்கும் தாயாகி ஈற்றில் ஒளிபடைக்கும் ஓர் சமூகம் தனை வளர்க்கும் தலைவியாய் பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என வாழ்வின் ஒவ்வொரு படியிலும் துணைநிற்பவள் பெண். அதன் பிரகாரம் பெண்மையின்றி அமையாது பேர் உலகு என்பர். அதற்கிணங்க, எமது சமுதாயத்தின் மகளிருக்கான அங்கீகாரத்தை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் எமது…

மேலும் படிக்க

சேவையாளர்களின் அடுத்த கட்ட நகர்வு

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வியல் பயிற்சி பட்டறை ஆனது இரண்டு வார காலங்களாக இந்தியாவில் இடம் பெற்றது. இப்பயிற்சியின் மூலமாக வாழ்வில் வழி தெரியாமல் தடுமாறும் இளைஞர் யுவதிகள், பாடசாலையினை விட்டு இடை விலகிய மற்றும் உயர்தரம், சாதாரண தர பரீட்சை போன்றவற்றில் சித்தி அடையாமல் பாதை மாறி செல்லும் மாணவர்கள் மற்றும் வீட்டில் முடங்கி இருக்கும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்காகவும் இளவயது திருமணத்தினை தடுத்து அவர்களுக்கான தொழிலுக்காக வழி காட்டுதல்…

மேலும் படிக்க

“கேடில் விழுச் செல்வம் கல்வி”

கல்விக்கு வறுமை தடையில்லை என்பதற்கிணங்க இன்றைய தினம் மட் / திக்கோடை கணேச வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தரம் 1 தொடக்கம் 11 வரையான 61 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் கலந்து கொண்டமை சிறப்பானதாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்காக எமக்கு கரம் கொடுத்த எமது புலம்பெயர் உறவுகளாகிய கனடாவில் வசிக்கும் திரு.தினேஸ் குமாரவேலு மற்றும் திரு….

மேலும் படிக்க