எமது பாலர் பாடசாலைகளின் இந்த ஆண்டிற்கான முதல் நகர்வு..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றது. இன்றைய சிறுவர்கள் முறையான விதத்தில் பயிற்றுவிக்கப்படும் போது, கட்டியெழுப்பப்படும் திறமையான மாணவர் சமுதாயமானது நாளை சிறந்த தலைவர்களை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அந்த வகையில் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இவ்வாண்டிற்குரிய முதலாவது கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. எமது 5 பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் 10 ஆசிரியர்களும் கலந்துகொண்டதோடுசென்ற ஆண்டிற்கான ஆவணங்களின் சமர்ப்பித்தலைத் தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதிகளில் அவர்களுடனான…

மேலும் படிக்க

தலைமைத்துவம்! ஒரு தொடர்ச்சியான செயற்பாடு

முறையானதோர் சமுதாயத்தின் நிலைத்திருப்பிற்கு சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்ட ஓர் தலைவரின் வழிகாட்டல் அவசியமாகின்றது.அவ்வாறானதொரு சிறந்த தலைவரின் உருவாக்கமானது பல பயிற்சிகள், அனுபவங்கள், வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். அதற்கிணங்க, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஓர் திட்டமாக எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தில் தலைமைத்துவப் பயிற்சியானது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான இரண்டாவது செயலமர்வு இன்றைய தினம் கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

மேலும் படிக்க

விவேகானந்த குடும்பத்தினருக்கான இயலுமை விருத்திச் செயலமர்வு

ஆளுமைமிக்கதோர் சமுதாயத்தின் உருவாக்கத்திற்குத் திறன்மிக்க சேவையாளர்களின் தேவை இன்றியமையாததாகும். அவ்வாறான திறன்களை விருத்தி செய்யுமுகமாக விவேகானந்த குடும்பத்திலுள்ள சேவையாளர்களுக்கான இயலுமை விருத்திப் பயிற்சிப்பட்டறையானது இன்றைய தினம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம் உள்ளிட்ட சேவையாளர்கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். கிழக்கு திறந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கான விரிவுரையாளர் திரு.ஞானரெட்ணம் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதோடு பயிற்சியைச் சிறப்பான முறையில் முன்னெடுத்து சென்றார். வாழ்க்கை திறன்கள் பற்றிய…

மேலும் படிக்க

வாழ்வியலும் வழிகாட்டலும்..

நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எம்மால் அடையாளப்படுத்தப்படும் தேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட திறன்களின் தொகுப்பே வாழ்க்கை திறன் ஆகும். எமது வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்வதில் வாழ்க்கைத்திறன் பாரிய பங்களிப்பைச் செலுத்துகின்றது, ஆகையால் வளர்ந்து வரும் ஒவ்வொரு இளம் சமுதாயத்தினரும் இப்பயிற்சியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாத தொன்றாகும். அந்த வகையில் திருப்பழுகாமத்தில் தரம் 6 மற்றும் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கையில் ஆர்வத்தினை தூண்டும் வகையில்…

மேலும் படிக்க

சிலம்பம் ஓர் மறைந்த அத்தியாயம் !!

தொன்று தொட்டு வந்த தமிழர் மரபென இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் அடையாளப்படுத்தப்பட்டுப் பரந்து விரிந்து பல கலைஞர்களாலும் கையாளப்பட்டு இன்றைய கால ஓட்டத்தில் மருவி வந்த தற்காப்புக்கலைகளில் சிலம்பம் முக்கியம் பெறுகின்றது. ஆண், பெண் பேதமின்றி இன்றைய காலகட்டத்தில் சிலம்பம் பல பிரதேசங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கிணங்க எமது மரபுக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் பாரிய கடமை எமக்குள்ளது. அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக ஸ்தாபிக்கப்பட்ட முல்லைத்தீவு…

மேலும் படிக்க

விவேகானந்த குடும்பத்தினரின் இன, மத பேதம் கடந்த பொங்கல் கொண்டாட்டம்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்துண்டு நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த குடும்பத்தினரால் இன, மத, பேதங்களின்றி அனைத்து மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் உழவர் திருநாள் இன்றைய தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும்…

மேலும் படிக்க

சாரதா நிலைய மாணவிகளின் தைத்திருநாள் கொண்டாட்டம்..

உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்துழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளே தைப்பொங்கல் தினமாகும். இந்நாள் உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் வெகு விமரிசையாக பொங்கல் விழா அனுஷ்டிக்கப்பட்டது. அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும், சாரதா நிலைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இம்மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டமை சிறப்பானதாகும். இதற்கான அனுசரணையை…

மேலும் படிக்க

வெள்ளத்தின் சுவடுகள் தாண்டி அனைவர் இல்லங்களிலும் வழி பிறக்க எம்மாலான பொங்கல்பொதி

மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகின்ற சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் செய்து கொண்டாடும் பண்டிகையே தைத்திருநாளாகும். தொடர்ச்சியான கனமழை மற்றும் முற்று முழுதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பிரதேசத்திலிருந்து பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அடிப்படைக் கணனி பயிலும் கித்துள் பிரதேச மாணவர்கள்…

மேலும் படிக்க

வித்தகராம் விவேகானந்தரின் நெறி நின்று..

ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனுக்காகவும் தமது ஆணித்தரமான வார்த்தைகள் மூலம், உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வை விழிப்புறச் செய்து எமது சமூகத்தில் ஆன்மீக ஞான ஒளி புகட்டி, மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தி, இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விவேகானந்தர். இன்று சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜனன தினமானது எமது விவேகானந்த தொழிநுட்பக் கல்லூரியில் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும்…

மேலும் படிக்க

உதவி கோரல்

எமது தமிழர்கள் பாரம்பரியமும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில்களை புரிபவர்கள் புது வருடத்தினை வரவேற்பதுடன் இந்த உலகிற்கு ஒளியினையும் சக்தியினையும் கொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை எதிர்வரும் 15 ஆம் திகதி வருகின்றது. தற்போதைய உலக, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தற்போது இலங்கையில் நிலவும் வெள்ள அனர்த்தத்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளே… எனவே இந்த வருடம் பொங்கல் பண்டிகையினை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில் மட்டக்களப்பு மற்றும் முல்லைதீவு…

மேலும் படிக்க